Latest Updates
-
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் சிவனின் போட்டோவை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது தெரியுமா?
Vastu Tips In Tamil: நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். இப்படி கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், தங்கள் வீட்டில் கடவுள்களின் போட்டோக்களை அதிகம் வைத்திருப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கடவுள்களின் போட்டோக்களை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அதுவும் இந்த வகையான போட்டோக்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகம் நிரம்பியிருக்கச் செய்து, வீடு மகிழ்ச்சியும், செல்வ செழிப்போடும் நிறைந்திருக்கும். நிறைய பேர் தங்களின் வீட்டில் விநாயகர் மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள்.

ஆனால் சிவனின் சிலையையும் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். அதோடு சிவபெருமானின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. இந்து மதத்தில் சிவபெருமானுக்கு தனி இடம் உண்டு. சிவனின் அருளைப் பெற்றிருந்தால், எப்பேற்பட்ட சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றி பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
எனவே நீங்களும் சிவனின் அருளைப் பெற்று வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க நினைத்தால், சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வீட்டில் வையுங்கள். ஆனால் சிவனின் போட்டோவை வீட்டில் வைக்கும் முன் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது இதுக்குறித்துக் காண்போம்.
இந்த வகையான சிவனை வைக்காதீர்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க நினைத்தால், சிவன் கோபமான நிலையில் இருக்கும் போட்டோவை வைக்காதீர்கள். ஏனெனில் சிவனின் கோபமான நிலை அழிவைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட போட்டோவை வைத்தால், அது வீட்டில் உள்ள சந்தோஷம், அமைதி, செல்வம் போன்ற அனைத்திலும் தடையை ஏற்படுத்தும்.
எந்த மாதிரியான சிவனை வைக்கலாம்?
வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க விரும்பினால், மகிழ்ச்சியான நிலையில் உள்ள சிவனின் போட்டோவை மட்டும் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நீடிக்கும். வாஸ்துப்படி, வீட்டில் சிவன் மட்டும் இருக்கும் போட்டோவை வைப்பதற்கு பதிலாக, சிவனுடன் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் இருக்கும் குடும்ப போட்டோவை வையுங்கள். இது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.
சுத்தம் அவசியம்
வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைத்தால், அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகள் மற்றும் அழுக்குகள் நிறைந்தவாறு சிவனின் போட்டோ அல்லது சிலையை வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நற்பலனுக்கு பதிலாக, கெடுபலனை அளிக்கும்.
எந்த திசையில் சிவனின் போட்டோவை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைப்பதாக இருந்தால், அதை வீட்டில் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். ஏனெனில் சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலை வடக்கு திசையில் தான் அமைந்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications