Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வாஸ்துப்படி, படுக்கையறையில் இந்த போட்டோக்களை வெக்காதீங்க.. இல்ல திருமண வாழ்க்கையே நரகமாயிடும்..
Vastu Tips For Bedroom In Tamil: நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, அதன் விளைவாக சந்தோஷமான, நிம்மதியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும். வீட்டில் வாஸ்து என்று வரும் போது, அது அறைகளுக்கு மட்டுமின்றி, வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பொருந்தும்.
நாம் அனைவருமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதுவும் வீட்டின் படுக்கையறையை மிகவும் அழகாக வைத்துக் கொள்ள, பலவிதமான பொருட்களை வாங்கி வைத்து படுக்கை அறையை அலங்கரிப்போம். அதில் பலர் போட்டோக்களால் படுக்கை அறையை அலங்கரிப்பார்கள்.

ஆனால் படுக்கை அறையில் போட்டோக்களை மாட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தவறான போட்டோக்களை மாட்டினால் கணவன்-மனைவி இடையேயான உறவு மற்றும் பரஸ்பர புரிதலில் பிரச்சனைகள் ஏற்பட்டு, திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்.
எனவே உங்கள் படுக்கை அறையில் போட்டோக்களை அதிகம் வைத்திருப்பவரானால், எந்த போட்டோக்களை வாஸ்துப்படி படுக்கை அறையில் வைக்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு தெய்வ பக்தி அதிகம் உள்ளது என்றால், எந்த தெய்வங்களின் படங்களை படுக்கை அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ராதா-கிருஷ்ணா போட்டோ
வாஸ்துப்படி ராதா-கிருஷ்ணா அன்பு மற்றும் நல்லிணக்கத்தில் அடையாளமாக கருதப்படுகின்றனர். இந்த ராதா-கிருஷ்ணாவின் ஜோடி போட்டோவை படுக்கை அறையில் வைத்திருந்தால், தம்பதிகளிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். ஆனால் எப்போதும் ராதாவின் போட்டோவை மட்டும் அல்லது கிருஷ்ணரின் போட்டோவை மட்டும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உறவுகளில் உறுதியற்ற தன்மையை உண்டாக்கும். மேலும் வாஸ்துப்படி, ராதா-கிருஷ்ணரின் போட்டோவை வடக்கு பார்த்த சுவற்றில் வைப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
சிவன்-பார்வதியின் போட்டோ
சிவன்-பார்வதி தம்பதிகளாக இருக்கும் போட்டோவை படுக்கை அறையில் வைப்பது மங்களகரமானது. இந்த போட்டோவானது உறவில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். திருமணமான தம்பதிகளிடையே பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்த, அந்த போட்டோவை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஆனால் சிவன் தனியாகவோ அல்லது பார்வதி தனியாகவோ இருக்கும் போட்டோவை வைக்கக்கூடாது.
அனுமன் போட்டோ
வாஸ்துப்படி படுக்கை அறையில் அனுமன் படத்தை வைத்திருப்பது மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது தம்பதிகளிடையே மோதலை அதிகரிக்கும். உங்களுக்கு அனுமன் பிடிக்குமானால், அனுமன் போட்டோவை பூஜை அறையிலோ அல்லது நுழைவாயிலிலோ வைத்து வழிபாடு செய்யுங்கள்.
துர்கா தேவி போட்டோ
துர்கா தேவி வலிமை மற்றும் கடுமையான ஆற்றலைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட துர்கா தேவியின் போட்டோவை படுக்கை அறையில் வைத்தால், அது அமைதியை சீர்குலைத்து, உறவுகளில் வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும். துர்கா தேவியின் போட்டோவை வீட்டில் வைக்க நினைத்தால், பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். அதுவும் கிழக்கு திசையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.
தியானம் அல்லது தவம் செய்வது போன்ற படங்கள்
படுக்கை அறையில் தியானத்தில் இருக்கும்படியான படங்களையோ அல்லது தவம் செய்வது போன்ற போட்டோக்களையோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி, இப்படியான படங்களை படுக்கை அறையில் வைத்தால், அது மன அழுத்தம், உறுதியற்ற தன்மை மற்றும் உறவுகளில் தூரத்தை உண்டாக்கும். எனவே இந்த மாதிரியான படங்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், உடனே அப்புறப்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications