Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
வாஸ்துப்படி இவற்றை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், குபேரனின் அருளால் செல்வம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒரு வீடு வாஸ்துப்படி கட்டப்படுவதோடு, அந்த வீட்டில் வைக்கும் பொருட்களும் சரியான திசையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சீராக இருந்து, அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
அதுவும் திசைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வசிப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரன் வசிக்கும் திசை தான் வடக்கு. எனவே வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசை எப்போதும் சுத்தமாகவும், கனமான பொருட்கள் எதுவும் இல்லாதவாறும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சொல்லப்போனால் இந்த திசையில் வீட்டின் பூஜை அறையை அமைப்பது மிகவும் நல்லது. இந்த வடக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகம் நுழையும். அதோடு இந்த திசையில் தான் லட்சுமி தேவியும் குடியிருக்கிறார்.
லட்சுமி தேவியின் சிலை
வாஸ்துப்படி, வடக்கு திசையில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியைத் தவிர, குபேரரும் வசிக்கிறார். இவ்விரு தெய்வங்களின் ஆசியும் ஒருவருக்கு கிடைத்தால், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவும் இந்த திசையில் லட்சுமி தேவியின் சிலையை அமைத்து வழிபடுவதன் மூலம், லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்து, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளும் முடிக்கு வரும்.
வடக்கு திசையில் வைக்க வேண்டிய செடிகள்
வீட்டின் வடக்கு திசையில் செல்வத்தை ஈர்க்கும் செடிகளை வைப்பதன் மூலமும் அந்த வீட்டில் பணப் பிரச்சனையைத் தடுத்து, செல்வத்தை அதிகரிக்கலாம். அதுவும் அழகிற்காகவும், அதிர்ஷ்டத்திற்காகவும் பெரும்பாலானோரின் வீட்டில் வளர்க்கப்படும் மணி பிளாண்ட் மற்றும் புனிதமான துளசி செடியை, வீட்டின் வடக்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, செல்வத்தையும் வீட்டில் அதிகரிக்கும்.
சமையலறை
வாஸ்துப்படி ஒரு வீட்டின் வடக்கு திசையில் சமையலறையை அமைத்தால், அந்த வீட்டில் செல்வம் மிகுதியாக சேரும். அதோடு, வடக்கு திசையில் சமையலறை இருக்கும் வீட்டில் உணவுத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது.
கண்ணாடி வைக்கவும்
ஒரு வீட்டில் நிச்சயம் கண்ணாடியை வைத்திருக்க வேண்டும். கண்ணாடியானது முகத்தை பார்க்க பயன்படுவது மட்டுமின்றி, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுவும் வாஸ்துப்படி ஒரு வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடியை வைத்திருந்தால், அது நிதி நிலைமையை மேம்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications