Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க.. பண கஷ்டம் வாட்டி எடுத்துடும்...
Vastu Rules For Tulsi Plant In Tamil: இந்தியாவின் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் காணப்படும் ஒரு மங்களகரமான செடி தான் துளசி. ஏனெனில் துளசி செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
எனவே லட்சுமி வாசம் செய்யும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் வீட்டில் துளசி செடியை வளர்த்து வந்தால், அதை தினமும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் தான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும்.

வாஸ்து சாஸ்திரத்தில் கூட, வீட்டில் துளசி செடியை வைத்திருந்தால் ஒருசில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வருவதோடு, துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இப்போது துளசி செடியுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைக் காண்போம்.
* துளசி செடியை எப்போதும் இருட்டான பகுதியில் வைக்கக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி செடிக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மேலும் துளசி செடி வைக்கும் இடத்தில் எப்போதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* துளசி செடியை எப்போதும் திறந்த வெளியில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் சூரிய ஒளி நேரடியாக அதில் படும், செடியும் செழிப்பாக வளரும்.
* துளசி செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால், அதன் இலைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். அதுவும் அந்த காய்ந்த இலைகளை தூக்கி எறிந்துவிடாமல், அந்த செடிக்கு கீழே அருகிலேயே போட வேண்டும்.
* வீட்டில் வைத்த துளசி செடிகள் காய்ந்து போனால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி செடியானது வீட்டிற்கு வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
* முக்கியமாக துளசி செடியை வீட்டில் வைக்கும் போது சரியான திசை பார்த்து வைக்க வேண்டும். எப்போதும் துளசி செடியை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசி செடியை வைக்க சிறந்த திசை வடக்க அல்லது வடகிழக்கு திசை தான்.
* துளசி செடியை எப்போதும் தொட்டியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். நேரடியாக தரையில் ஊற்றி வளர்க்கக்கூடாது. மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* ஞாயிற்று கிழமைகளில் துளசி செடிக்கு நீரை ஊற்ற வேண்டாம். அதேப் போல் இந்நாளில் துளசி இலைகளைப் பறிப்பதும் அபசகுனமாக கருதப்படுகிறது.
* துளசி செடியை தொடும் போது எப்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எப்போதும் துளசி இலைகளைப் பறிப்பதாக இருந்தால், அவற்றை கைகளில் தான் பறிக்க வேண்டும். கத்தரிக்கோல், கத்தி போன்ற எவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
* முக்கியமாக தேவையில்லாத துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிக்காமல் துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டு. அப்படி குளிக்காமல் தொடும் துளசி இலைகள் வழிபட்டால் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











