Just In
- 31 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வந்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்!!!
நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பேசத் தெரியாது. அவை என்ன நினைக்கின்றன, அவற்றின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை மனிதர்களைப் போல் பேசி வெளிப்படுத்த விலங்குகளால் முடிவதில்லை. நீங்கள் செல்லப் பிராணிகளின் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தால், அவை நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் மகிழ்வாக வைத்திருக்க உதவுவதில், உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நிகராக வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, அவற்றின் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய தலையாய கடமைகளுள் ஒன்று என்பதை மறுக்க வேண்டாம். உங்களுடைய செல்லப் பிராணிகள் ஏன் கோபப்படுகின்றன?
அவற்றிற்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தால், அவற்றை வெளிப்படுத்தும் அறிகுறிகளும் கண்டிப்பாக இருக்கும். அதாவது அவை விசித்திரமாக நடந்து கொள்ளும் அல்லது சாப்பிடாமல் இருக்கும். உங்களிடம் நாய்கள், பூனைகள், மீன்கள் அல்லது பறவைகள் என எவை இருந்தாலும், அவை ஒவ்வொன்றின் உடல் ரீதியான பிரச்னைகளும் மாறுபட்டவை என்பதை உணரவும். அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே மருந்தினை பயன்படுத்த வேண்டாம்.
உங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு வரும் நோய்களை எதிர்கொள்வதற்கு, நோய் வருவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதோ உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வந்துள்ளதா என்பதை அறிவதற்கான சில அறிகுறிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மாறுபட்ட செயல்பாடுகள்
உங்களுடைய செல்லப்பிராணி மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதனுடைய நடவடிக்கைகளில் திடீரென ஏற்படும் ஏதாவதொரு மாற்றமோ, உடல் ரீதியான மாறுதல்களோ நோய் வந்ததற்கான அறிகுறிகளில் முதன்மையானவையாகும். நாய்களைப் பொறுத்த வரையில், அவை நடந்து செல்லவோ அல்லது விளையாடுவதையோ விரும்பாமல் இருக்கும். பூனைகள் எந்தவொரு காரணமும் இல்லாமல் கோபத்துடன் திரிந்து கொண்டிருக்கும்.
உடல் தோற்றத்தில் மாறுதல்
செயல்பாடுகளை விட, தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். உங்களுடைய விலங்குகள் சரியாக முகர்ந்து பார்க்கும் மற்றும் கண்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும். தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். உங்களுடைய சோபா மற்றும் தளங்களில் பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடந்தாலோ அல்லது அவற்றின் எடை திடீரென குறைந்து விட்டாலோ, உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும்.
பசி இல்லை
உங்களுடைய செல்லப் பிராணி எதையும் சாப்பிட மறுக்கிறதா? இதன் காரணம் வெளிப்படையானது. அவற்றின் பசியின்மை குறிப்பிட்ட காலத்தையும் தாண்டி இருந்தால், கண்டிப்பாக ஏதோ பிரச்சனை உள்ளது. இதன் மூலமாகவும் நீங்கள் செல்லப்பிராணிகளின் உடல் நலத்தை அறிய முடியும்.
சுவாச பிரச்சனைகள்
உங்களுடைய செல்லப் பிராணிகள் நோய்வாய்ப் பட்டுள்ளதா என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளும் வழிமுறை எது? உங்களுடைய பிராணிக்கு தும்மல், இருமல் அல்லது சுவாசிப்பதில் தொந்தரவு உள்ளதை கவனித்திருக்கிறீர்களா? இந்த அறிகுறிகள் சுவாசப் பிரச்னைகளைத் தூண்டக் கூடும். அவற்றின் மார்பில் ஏதாவது தொற்று இருக்கலாம். எனவே மருத்துவ கவனிப்பு இங்கே அவசியம்.
தாகம் இல்லையே
சாப்பிட மறுக்கும் செல்லப் பிராணி, எதையும் குடிக்கவும் கூட மறுக்கலாம். இது மிகவும் மோசமான பிரச்சனை என்பதை உடனடியாக உணருங்கள். விலங்களுக்கு நீர்ப்போக்கு ஏற்படுவதால், மோசமான சுகாதார விளைவுகள் ஏற்படும். அதுவும் முதல் 18 மணி நேரத்திற்குள் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்காமல் இருந்தால் தொந்தரவு நிச்சயம் உண்டு.
வாந்தி
உங்களுடைய செல்லப் பிராணிக்கு உடல் நலமில்லை என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? உங்களுடைய செல்லப் பிராணிகள் அவை விரும்பாத உணவுப் பொருட்களைத் தூக்கி எறிந்தால் ஆச்சரியம் இல்லை. எனினும், அவை எதையாவது சாப்பிட்டு விட்டு அடிக்கடி வாந்தி எடுத்தால் கவனம் தேவை. பூனைகள் மற்றும் நாய்கள் வாந்தி எடுப்பதற்கு சிறுநீரக பாதிப்புகளும், வைரஸ் தொற்றுகள் அல்லது விஷம் கலந்த எதையாவது சாப்பிடுதல் போன்றவை காரணங்களாக உள்ளன.
வயிற்றுப்போக்கு
வயிற்றுப் போக்குடன் சேர்த்து வாந்தி வருவது மிகவும் மோசமான தொந்தரவாகும். நாய்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது சகஜமாக இருந்தாலும், அவற்றை வீட்டு மருத்துவம் மூலமாக (சர்க்கரையில்லா பூசணியைக் கொடுத்தல், 24 மணிநேரத்திற்கு சாப்பிட வைக்காமல் இருத்தல்) சரிசெய்ய முடியாவிட்டால், பிரச்சனை பெரியது என்பதை உணருங்கள்.
பிறாண்டுதல்
உங்களுடைய செல்லப் பிராணிகள் தொடர்ந்து பிறாண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், உண்ணிகள் மற்றும் பூச்சிகளால் அவை பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணருங்கள். இந்த ஒட்டுண்ணிகளை அழிக்க விரும்பினால் உங்களுடைய செல்லப் பிராணிகளை குளிக்க வைத்து, வியாபார ரீதியிலான சிகிச்சைகளை எடுக்கவும். உதாரணமாக, உங்களுடைய பறவை பிறாண்டிக் கொண்டே இருந்தால், மஞ்சள் கலந்த தண்ணீரில் குளிக்க வையுங்கள்.
எனவே, உங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு நோய் வரும் அறிகுறிகளை எப்பொழுதும் கவனித்து வாருங்கள். இந்த அறிகுறிகள் அதிகரிக்கும் போது மருத்துவரை அணுக தாமதிக்க வேண்டாம். ஏனெனில், நம்முடைய செல்லப் பிராணிகளும் கூட குடும்பத்தில் ஒரு உறுப்பினர் தான்.