Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
நாய் வாங்க போறீங்களா? இதை படிச்சுட்டு போங்களேன்...
வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என்றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெடுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதில் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக்கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப்பம் மனதில் பெரிதும் இருக்கும்.
அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்துவிடும். ஆகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும் முன் எவற்றையெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!

* மற்றொன்று நாயை வாங்கியப் பின் அதனை நம்மால் சரியாக கவனிக்க முடியுமா? என்பதனையும் தெளிவாக யோசித்துக் கொள்ள வேண்டும். அதிலும் வேலைக்கு செல்பவர்கள் நாயை வாங்குவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும். நாயை வாங்கினால் அதனை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது, அதனுடன் விளையாடுவது என்று அதனுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். ஏனெனில் நாய் எப்போதும் தனிமையை விரும்பாது. இல்லை, முடியாது என்று இருப்பவர்கள், நாய் வாங்கும் எண்ணத்தை கைவிடுவது நல்லது.
* நாயை வாங்கினால், நம்மால் அதனை சரியாக பராமரிக்க முடியுமா? என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாயை பராமரிப்பது என்பது எளிதானது அல்ல. அதற்கு நிறைய செலவாகும். அதனை அடிக்கடி கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுதல், அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை வாங்கி கொடுத்தல், அதன் ஆரோக்கியத்திற்கு வேண்டியவற்றை செய்தல் போன்ற அனைத்தையும் நினைத்து, பின் வாங்க வேண்டும்.
* வீட்டிற்கு எந்த மாதிரியான நாயை வாங்க வேண்டும். இப்போது வீடு சிறியதாகவும் நாய் பெரியதாகவும் இருந்தால், அவற்றை பராமரிப்பது என்பது கடினமாகிவிடும். ஏனென்றால் அது செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவில்லாமல், அதனை கட்டுப்படுத்துவது என்பது கடினமாகிவிடும். ஆகவே சிறிய நாயை வாங்கினால், அதனை நாம் பழக்கப்படுத்தி, கட்டுப்படுத்திவிடலாம்.
ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு, நாயை வாங்கினால், எந்த ஒரு பிரச்சனையுமின்றி, அதனுடன் சந்தோஷமாக விளையாடி மகிழலாம்.



Click it and Unblock the Notifications











