Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
செல்லப்பிராணிக்கு உடல் பருமன் இருக்கா? செக் பண்ணுங்க!

கொழு கொழு என காண்பவரை வியக்கவைக்கும் அந்த பூனை ஆரஞ்சும் வெண்மையும் கலந்த நிறத்தை கொண்டது. டாபி என்ற அந்த பூனைக்கு இரண்டு வயது மட்டுமே நிரம்பியுள்ளது. அந்த பூனையை செல்லப்பிராணியாக வளர்த்தவருக்கு 87 வயதாகிவிட்டதால் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் விலங்குகள் நல பாதுகாப்பு சங்கத்தில் அதை ஒப்படைத்து விட்டார்.
டாபி புகழ்பெற காரணமே அதன் உடல் எடைதான். இரண்டு வயதில் அந்த பூனை 39 பவுண்ட் எடை இருந்தது. ஒரு வளர்ந்த பூனை சராசரியாக 7 முதல் 12 பவுண்ட் எடை மட்டுமே கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் டாபி 5 மடங்கு கூடுதலாக அதாவது 39 பவுண்ட் எடை கொண்டிருந்தது. இதுவே அதன் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்கிறார் சான்டா விலங்குகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று டாபி வழக்கம்போல உற்சாகமாக இல்லாமல் சற்றே மூச்சுத்திணறல் இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரித்து அதுவே பூனையின் மரணத்திற்கும் காரணமாகிவிட்டது என்கின்றனர் விலங்குகள் நல பாதுகாப்பாளர்கள். பிரசித்தி பெற்ற கொழு கொழு பூனையில் மரணம் பற்றி, பேஸ்புக், டுவிட்டர் என அனைத்திலும் தகவல் பகிரப்பட்டுள்ளது.
உடல்பருமனை தடுக்க செல்லப்பிராணிகளுக்கு உடல் பருமன் ஏற்பட்டால் அவைகளால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. இதை தவிர்க்க பிராணிகளுக்கு அதீத கொழுப்பு சத்துள்ள உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரே இடத்தில் அடைத்தே வைத்திருக்காமல் வெளியிடங்களுக்கு வாக்கிங் கூட்டிச்செல்லவேண்டும். சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாட பழக்கவேண்டும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
அதன் எடை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். சிறிது அதிகரித்தாலும் அவைகளுக்கு கொடுக்கும் உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தாலும் அவைகளின் உடல் எடை அதிகரிக்கும். எனவே விலங்குகளை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று செக் அப் செய்யவேண்டும்.



Click it and Unblock the Notifications