படுக்கையில் படிந்த செல்லப் பிராணியின் சிறுநீர் கறையை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

By Babu

அனைத்து வீடுகளிலும் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளானது, அந்த வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு உறுப்பினராக கருதப்படும் செல்லப் பிராணிகளானது வீட்டின் எந்த ஒரு இடத்திற்கும் எவ்வித தடையின்றி செல்ல அனுமதிக்கப்படுவதால், அவை நாம் படுக்கும் படுக்கை, உட்காரும் ஷோபா போன்றவற்றில் அமர்வது, தூங்குவது என்று செய்கின்றன.

இப்படி செய்வதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவை படுக்கை மற்றும் ஷோபா போன்றவற்றில் சிறுநீர் கழித்துவிட்டால், என்ன செய்வீர்கள்? அவைகளின் சிறுநீர் படுக்கை மற்றும் ஷோபாவில் இருந்தால், அவை கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, கறைகளையும் தங்கச் செய்துவிடும்.

இங்கு அப்படி உங்கள் செல்லப் பிராணிகளானது படுக்கை மற்றும் ஷோபாவில் சிறுநீர் கழித்துவிட்டால், அதன் கறையைப் போக்க சில எளிய வழிகளை உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடனே சுத்தம் செய்யவும்

உடனே சுத்தம் செய்யவும்

உங்கள் செல்லப் பிராணியானது படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அப்போது உடனே ஈரத்தை உறிஞ்சும் துணி அல்லது பேப்பர் கொண்டு உடனே சுத்தம் செய்து, பின் ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால், படுக்கையில் செல்லப் பிராணியின் சிறுநீர் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சூரிய வெளிச்சம்

சூரிய வெளிச்சம்

ஈரமான துணியைக் கொண்டு படுக்கையை சுத்தம் செய்த பின்னர், அதனை சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுக்க வேண்டும். இதனால், படுக்கையில் படிந்த சிறுநீரின் துர்நாற்றத்தைப் போக்கலாம். குறிப்பாக இந்த செயலை உடனடியாக செய்ய வேண்டும்.

சோப்பு தண்ணீர்

சோப்பு தண்ணீர்

செல்லப் பிராணியின் சிறுநீர் கறை படியாமல் இருக்க வேண்டுமானால், ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுத்த பின்னர், சோப்பு தண்ணீர் கொண்டு ஒருமுறை துடைத்து எடுத்துவிட்டு, பின் மீண்டும் சுத்தமான நீரில் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்து, சூரிய வெளிச்சத்தில் வைத்தால், செல்லப் பிராணியின் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

லிஸ்டரின் முறை

லிஸ்டரின் முறை

மௌத் வாஷ்ஷான லிஸ்டரினை நீரில் கலந்து, அதனை செல்லப் பிராணி சிறுநீர் கழித்த இடத்தில் தடவி, பின் ஈரமான துணியைக் கொண்டு, துடைத்து எடுத்து, பின்பு அதனை சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும்.

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

இந்த முறையில் தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதனை ஒரு துணியில் நனைத்து, சிறுநீர் படிந்த இடத்தை துடைத்து, பின் அந்த இடத்தில் வினிகரை தடவி 1 நிமிடம் ஊற வைத்து, பின் உலர்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, February 24, 2014, 18:26 [IST]
Desktop Bottom Promotion