Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க...

* சமைப்பதற்கு அடுப்பில் அடிக்கடி வைத்து, அதனால் கருப்பாக மாறிய பாத்திரங்களை கூட, கோலாவை வைத்து சுத்தம் செய்தால் எளிதில் அந்த கருப்பானது போய்விடும். ஆகவே பாத்திரங்களை புத்தம் புதிது போல் மாற்றுவதற்கு சிறந்த பொருளில் கோலாவும் ஒன்றாகிவிட்டது. அதிலும் அந்த கருப்பான பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு, அந்த பாத்திரத்தில் கோலாவை விட்டு, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து விடவும். பின் 15 நிமிடங்கள் கழித்து அதனை இறக்கி தேய்த்தால், அதில் உள்ள கருப்பு நீங்கி புத்தம் புதிதாக மாறிவிடும்.
* துணிகளில் ஏதேனும் கறை படிந்துவிட்டால், உடனே கடைகளில் விற்கும் கறைகளை நீக்கும் பொருளை வாங்கி நீக்குவோம். ஆனால் அவற்றை விட இந்த கோலாவை பயன்படுத்தி துவைத்தால், துணிகளில் ஏற்பட்ட கறைகளை காணவே முடியாது.
சிலசமயங்களில் துணிகளில் இரத்தக் கறை அல்லது கிரீஸ் கறைகள் படிந்துவிட்டால், அப்போது ஒரு சிறிய துணியில் கோலாவை நனைத்து, நீக்கலாம். வீட்டில் வாஷிங் மிஷின் பயன்படுத்துபவர்கள் என்றால் துணிகளோடு சிறிது கோலாவை ஊற்றி, சோப்பு பவுடரை போட்டு துவைத்தால், கறைகள் சுத்தமாக போய்விடும். அதுமட்டுமல்லாமல், கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி கறைகளை நீக்கினால், கறை ஏற்பட்ட இடம் நன்கு தெரியும், ஆனால் கோலாவை வைத்து பயன்படுத்தினால், அந்த கறை எங்கு ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கவே முடியாது.
* கோலாவை வைத்து வாஷ்பேஷன், பாத் டியூப், டாய்லட் போன்றவற்றை கூட சுத்தம் செய்யலாம். அதற்கு கோலாவை அவற்றிலெல்லாம் ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் டாய்லட் பிரஷ் வைத்து தேய்த்து, தண்ணீர் ஊற்றினால், புத்தம் புதிது போல் மின்னும்.
* ஏதேனும் துரு பிடித்த பொருட்களை இருந்தாலம் அவற்றையும் கோலாவால் சுத்தம் செய்ய முடியும். அதற்கு கோலாவை, இரவில் படுக்கும் முன் துருப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்தால், துரு எளிதில் போய்விடும்.
* கண்ணாடிப் பொருட்களை கோலாவை வைத்து சுத்தம் செய்தால், அதில் படிந்திருக்கும் தூசிகள் எளதில் நீங்கிவிடும். இது ஒரு சிறந்த கிளாஸ் கிளீனர். ஆகவே கோலாவை ஒரு காட்டனில் தொட்டு, கண்ணாடியை துடைத்தால், கண்ணாடி நன்கு மினுமினுப்போடு இருக்கும்.



Click it and Unblock the Notifications