துருபிடித்த சாவிகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்...

By Maha

Key
வீட்டில் பயன்படுத்தும் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் பூட்டும் சாவியும் ஒன்று. ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் பொருட்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பூட்டு போட்டுவிட்டு செல்வோம். மேலும் பூட்டு மற்றும் சாவியை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அத்தகைய பாதுகாப்பை அளிக்கும் பூட்டு மற்றும் சாவி துருபிடித்திருந்தால், அவற்றை அப்படியே விட்டுவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திறப்பதே சிரமமாகிவிடும். ஆகவே அந்த பூட்டு மற்றும் சாவியை சுத்தம் செய்வதற்கு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது...

சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள...

1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில் அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.

2. சாவியானது சேறு அல்லது தண்ணீரில் விழுந்து விட்டால், அதனை முதலில் ஈரம் இல்லாத துணியால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துருபிடிக்காமல் இருக்கும்.

3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.

4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல்லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும்புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.

5. சாவியில் துரு இருந்தால், அதனை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங்கள், துரு முற்றிலும் வந்துவிடும்.

6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதாவது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வேண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகு அதனை சூடான தண்ணீரில் கழுவினால் துருவானது போய்விடும்.

பூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...

1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெயை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபிடித்த பூட்டை திறந்துவிடலாம்.

2. ஈரமான பகுதியில் பூட்டை வைக்க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப்பது கடினமாகிவிடும்.

3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தாலும் அவை போய்விடும்.

இவ்வாறெல்லாம் செய்தால் பூட்டு மற்றும் சாவியானது

Story first published: Thursday, June 28, 2012, 14:13 [IST]
Desktop Bottom Promotion