Just In
- 12 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 15 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 3 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
Don't Miss
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பழங்களை நறுக்கி வெச்சுடீங்களா? கெடாமல் இருக்க சில யூஸ்ஃபுல் டிப்ஸ்....
பழங்களை வாங்கினால் அவற்றை சாப்பிடும் போது அவற்றை நறுக்கி சாப்பிடுவோம். ஆனால் அவ்வாறு நறுக்கியதை முற்றிலும் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும். அப்போது அவற்றை சேகரித்து வைப்போம். அவ்வாறு சேகரித்து பாதுகாப்பாக வைக்கும் போது, அந்த பழங்கள் சில சமயங்களில் வாடி, ப்ரௌன் நிறத்தில் ஆகிவிடும்.
ஆகவே அவ்வாறு ஏற்படாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து, பழங்களை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட்டு, ஆரோக்கியமாக இருக்கலாமா!!!.
ஆப்பிள்
பழங்களிலேயே நறுக்கியதும் சாப்பிட்டாக வேண்டும் என்று இருப்பது, ஆப்பிள் தான். அத்தகைய ஆப்பிள் நறுக்கியப் பின்னர் கெடாமல், நிறம் மாறாமல் இருக்க, சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது மற்ற வினிகரைத் தடவி, ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால், நிறம் மாறாமல் ப்ரஷ் ஆக இருக்கும். இல்லை நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றால், எலுமிச்சை சாற்றை தடவி வைக்க வேண்டும்.
வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் என்று தமிழில் அழைக்கப்படும் அவோகேடோ பழத்தை நறுக்குவது என்பது எளிதானது. இது மிகவும் மென்மையாக இருக்கும். அவ்வாறு நறுக்கி முழுதும் சாப்பிட முடியவில்லையென்றால், அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் இந்த பழம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெடாமல் இருக்கும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் நறுக்கியதும் விரைவில் ப்ரௌன் நிறத்தை அடைந்துவிடும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே கொய்யாப்பழம் நிறம் மாறாமல் இருக்க அதன் மேல் சிறிது எலுமிச்சை சாறு அல்லது நறுக்கிய பெரிய பச்சை மிளகாயை அதன் மேல் தெளிக்க வேண்டும். இதனால் நன்கு ப்ரஷ்ஷாக இருக்கும்.
பப்பாளி
நறுக்கிய பப்பாளி துண்டுகளையும் சரி, சாதாரணமான பப்பாளியையும், ஒரு சுத்தமான பேப்பரால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் பப்பாளி பழம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை நறுக்கியப் பின், அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு, சுற்றி வைக்க வேண்டும். இதனால் நறுக்கிய எலுமிச்சைப் பழம் கெடாமல், சில நாட்கள் இருக்கும்.தர்பூசணி- தர்பூசணிப் பழத்தை அறுத்து சாப்பிடும் போது, அதனை முழுவதும் சாப்பிட முடியவில்லை என்றால், ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைத்தால், பழத்துண்டுகள் ப்ரஷ்ஷாக இருக்கும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தையும் தர்பூசணியைப் போல் நீண்ட நாட்கள் வைத்திருக்க, நல்ல காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள ஈரப்பசை, அப்படியே இருக்கும்.