Just In
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 12 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
வீட்டை ஒளிமயமாக்கும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள்!!!
முக்கிய விசேஷத்தின் போது வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றிப்பார்த்தால், அதனுடைய ஒளி வெள்ளத்தில் வீடே சொர்க்கலோகமாக தெரியும். மேலும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் ஒரு சுவாரஸ்யமான உபகரணமாக மெழுகுவர்த்திகள் விளங்குகின்றன. மலிவு, மணம் மற்றும் கவரும் தன்மை ஆகியவற்றால் ஒரு அறையில் இதமான கதகதப்பை இவை தருகின்றன. மதச்சடங்குகள் திருமண விழாக்கள், இரவு விருந்துகள் என அனைத்திலும் மெழுகுவர்த்தி அலங்காரத்தை காணலாம். அலுவலகத்தில் வேலை பளுவால் சோர்ந்து வீட்டிற்கு வருகிறீர்களா? அப்போது வீட்டிற்கு வந்தவுடன் சில மணம் மிகுந்த மெழுகுவர்த்திகளை ஏற்றிப் பார்த்தால், மன அழுத்தம் குறைவதை நிச்சயம் உணரலாம்.
மெழுகுவர்த்திகளை முக்கிய நிகழ்ச்சிகளில் ஏற்றும் போது, அது அங்குள்ள சூழ்நிலையையே மாற்றும். மேலும் விருந்தினர்களிடையே ஆச்சர்யமான உணர்வை உருவாக்கும். மெழுகுவர்த்திகளால் வீட்டை மிக அழகாக அலங்கரிக்க முடியும் என்பது கூட பலருக்கு தெரியாது. வழக்கமாக, பலர் மெழுகுவர்த்தியை ஒரு மேஜையின் நடுவில் வைப்பர். ஆனால் மெழுகுவர்த்திகளை பலவழிகளில் அலங்கரித்து, பல விதமாக பார்வைக்கு வைக்கலாம். இது பார்ப்பவர்களையும் மகிழ்வித்து, நமக்கும் பாராட்டை பெற்றுத் தரும். இனி மெழுகுவர்த்திகளை எவ்விதங்களில் அலங்கரித்து, எவ்வாறு காட்சிக்கு வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மிதக்கும் மெழுகுவர்த்திகள்
ஒரு நல்ல படுக்கை அறையை புதியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற விரும்பினால், ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சிறிய மெழுகுவர்த்திகளை மிதக்க விடலாம் அல்லது வீட்டில் நீச்சல் குளம் இருந்தால், அதிலும் இவ்வாறு செய்யலாம். மேலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்பினால், மெழுகுவர்த்தியை ஒரு சிறு கிண்ணத்தில் வைத்து, அதனைச் சுற்றி செயற்கை பூக்களை பல வண்ணங்களில் வைக்கலாம். இதனால் அந்த ஒளிகளுக்கிடையே அவை புதுமையாக தெரியும். இது விருந்தினரை நிச்சயம் ஈர்க்கும்.
அசாதாரண மெழுகுவர்த்திகள்
உருளை வடிவமைப்பை தவிர வேறு வடிவங்களிலும் மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. புது வகையாக ரீசார்ஜ் மெழுகுவர்த்திகளும் தற்போது கிடைக்கின்றன. பாரம்பரியமான மெழுகுவர்த்திகளை விட இவை நீடித்து எரியும்.
வாசனை மெழுகுவர்த்திகள்
வாசனை மெழுகுவர்த்திகள் தற்போது மிகப் பிரபலமாக உள்ளன. பலவித வாசனை கொண்ட மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது ஒரு தனித் தன்மையை காட்டும். உதாரணமாக, லாவண்டர் மற்றும் வென்னிலா வாசனை உடையவை, ஒரு இதமான, அமைதியான சூழலை உருவாக்கும்.
பசுமைமாறா மெழுகுவர்த்திகள்
ஒரு பாத்திரத்தில் மெழுகுவர்த்தியை வைத்து, அதனைச் சுற்றி பசுமையான பச்சை நிற சிறு சிறு இலைகள் அல்லது ஏதேனும் பூக்களை வைக்க, அது கண்ணுக்கினிய காட்சியாக அமையும்.
தொங்கும் மெழுகுவர்த்திகள்
மெழுகுவர்த்திகளை கம்பிகள் மூலம் இணைத்து தொங்கவிடலாம். தொங்கும் மெழுகுவர்த்திகளுக்கிடையே சிறிய செயற்கை பூக்கள், மணிவகைகள் போன்றவற்றை வைக்கலாம்.
புத்தக அலமாரியில் மெழுகுவர்த்திகள்
புத்தக அலமாரியை வெறுமையானதாக பார்க்க விரும்பாவிட்டால், பல வண்ணங்களில் உள்ள பெரிய மெழுகுவர்த்திகளை கண்ணாடி பாட்டிலின் உள்ளே வைத்து ஏற்றி வைக்கலாம். இதனால் அவற்றின் வண்ணங்கள் புத்தகங்கள் மீது பட்டு, புத்தகத்தின் தோற்றத்தை மெருகேற்றும்.