Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்துவதற்கான சில வழிகள்!!!
மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே செடிகள் நன்கு செழிப்புடன் வளர்வதற்கு நீரானது மிகவும் இன்றியமையாதது. அதிலும் மழைநீர் மிகவும் சிறந்தது. ஏனெனில் மழை நீர் மிகவும் சுத்தமான நீர்.
எனவே மழைநீரை செடிகளுக்கு ஊற்றி, செடிகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மழைநீராலும் செடிகளுக்கு அழிவு நேரிடக்கூடும். எனவே இப்போது மழைநீரை செடிகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்.

* மாசடைந்திருக்கும் நகரத்தில் இருந்தால், முதல் மழையில் செடிகள் நனையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடத்தில் பொழியும் மழையானது காற்றில் உள்ள அனைத்து மாசுக்களையும் வெளியேற்றும். இதனால் அந்த மழையானது செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
* தொட்டியில் செடிகளை வளர்த்தால், மழை லேசாக பொழியும் போது, அவற்றை மழைப் பொழியும் இடங்களில் வைத்தால், செடிகளின் இலைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, செடியை பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தும்.
* ஒருவேளை மழையானது ஜோராக பொழிந்தால், அப்போது அதனை வெளியே வைக்க வேண்டாம். இல்லையெனில் மழையின் வேகமானது, செடிக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் காற்று அதிகம் இருக்கும் போதும், செடிகளை பத்திரமாக வீட்டின் உள்ளே வைக்க வேண்டும்.
* வேண்டுமெனில் வேகமாக மழைப் பொழியும் போது, அந்த நீரை சேகரித்து வைத்து, செடிகளுக்கு ஊற்றலாம். அதிலும் ஒரு வாளியை மழைப்பொழியும் இடத்தில் வைத்து சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கும் நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு வலுவோடும், ஆரோக்கியமாகவும் வளரும். ஏனெனில் மழைநீர் என்பது மிகவும் தூய்மையான நீர் மற்றும் எங்கும் கிடைக்காதது.



Click it and Unblock the Notifications