Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வீட்டில் நேரம் போகவில்லையா? தோட்டம் போடுங்களேன்!

இதோ சில யோசனைகள்....
வீட்டில் நேரம் போகவில்லை என்று நினைக்கும் பெண்கள் தோட்டம் அமைக்கலாம். தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. எல்லோருக்கும் அது வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். அவர்கள் தங்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.
மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை ஏதேனும் லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம். புதினா செடி, கீரை வகைகளை சிறிய தொட்டிகளில் ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு , அவற்றை வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.
அது தினமும் ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் உள்ளம் ஆனந்தத்தில் கூத்தாடும். மேலும் அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது, வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது நமது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் நமது கொள்கையாக வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்று இருக்கட்டுமே!



Click it and Unblock the Notifications











