Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
வீட்டில் நேரம் போகவில்லையா? தோட்டம் போடுங்களேன்!

இதோ சில யோசனைகள்....
வீட்டில் நேரம் போகவில்லை என்று நினைக்கும் பெண்கள் தோட்டம் அமைக்கலாம். தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. எல்லோருக்கும் அது வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். அவர்கள் தங்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.
மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை ஏதேனும் லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம். புதினா செடி, கீரை வகைகளை சிறிய தொட்டிகளில் ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு , அவற்றை வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.
அது தினமும் ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் உள்ளம் ஆனந்தத்தில் கூத்தாடும். மேலும் அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது, வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது நமது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் நமது கொள்கையாக வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்று இருக்கட்டுமே!



Click it and Unblock the Notifications