Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?

1. முதலில் செடியின் அளவை பொறுத்தே தண்ணீரை ஊற்ற வேண்டும். செடியானது சிறிதாக இருந்தால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதன் மேல் தண்ணீரைத் தெளித்தோ அல்லது அதை வைத்துள்ள இடம் ஈரமாக இருந்தாலே போதுமானது.
2. காலநிலையைப் பார்க்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால், செடியில் உள்ள தண்ணீரானது முற்றிலும் வற்றிவிடும். ஆகவே செடியின் வேரானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிலும் தண்ணீரானது செடியின் அளவைப் பொறுத்ததே. ஆகவே தரையானது வற்றாமல் இருக்குமளவு தணணீரானது வேண்டும்.
3. செடிக்கு தண்ணீரை காலை அல்லது மாலையிலே ஊற்ற வேண்டும். அது செடியின் உறிஞ்சும் தன்மையைப் பொறுத்தே ஊற்ற வேண்டும். காலையில் ஊற்ற வேண்டும் என்றால் அதிகாலையிலே ஊற்ற வேண்டும். ஏனெனில் செடியானது தண்ணீரை உறிஞ்ச வேண்டும். இல்லையென்றால் தண்ணீரானது சூரியனால் உறிஞ்சப்பட்டு, செடிக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். ஆகவே தண்ணீரை ஊற்ற சிறந்த நேரம் அதிகாலையில் அல்லது மாலையிலே சிறந்தது.
4. சில செடிகள் இயற்கையிலேயே நிலங்களில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சி வாழும். அத்தகைய செடிகள் தண்ணீர் இல்லாமல் கூட சில நாட்கள் வாழும். ஆகவே அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றாமல், வாரத்திற்கு இருமுறை ஊற்றினாலே போதுமானது.
5. நிலத்தின் தன்மையை பார்க்க வேண்டும். தோட்டமண் அல்லது களிமண் உள்ள நிலமானது தண்ணீரை சேகரித்துக் கொண்டு, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலமே செடிகள் வளர ஏற்றது. வறண்ட நிலத்தில் செடிகளை வைத்தால், அவை செடிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, பின் இலைகள் கொஞ்ச காலத்தில் மஞ்சளாக மாறிவிடும்.
6. செடிகளை வைத்துள்ள இடத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டின் வெளியே வைக்கக் கூடிய செடி என்றால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே வீட்டின் உள்ளே வைக்கக் கூடிய செடி என்றால் அதற்கு தினமும் தண்ணீரானது ஊற்ற தேவையில்லை. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் செடிகளுக்கு காலநிலையைக் பொறுத்தும் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதுவும் கோடைகாலம் என்றால் தினமும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறெல்லாம் தண்ணீர் விட்டு செடிகளைப் பராமரித்தால், செடிகள் வண்ண வண்ண மலர்களில் பூத்து குலுங்குவதோடு, செழிப்போடு நன்கு வளரும்.



Click it and Unblock the Notifications











