Latest Updates
-
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றலாம்?

1. முதலில் செடியின் அளவை பொறுத்தே தண்ணீரை ஊற்ற வேண்டும். செடியானது சிறிதாக இருந்தால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதன் மேல் தண்ணீரைத் தெளித்தோ அல்லது அதை வைத்துள்ள இடம் ஈரமாக இருந்தாலே போதுமானது.
2. காலநிலையைப் பார்க்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருந்தால், செடியில் உள்ள தண்ணீரானது முற்றிலும் வற்றிவிடும். ஆகவே செடியின் வேரானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க தினமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிலும் தண்ணீரானது செடியின் அளவைப் பொறுத்ததே. ஆகவே தரையானது வற்றாமல் இருக்குமளவு தணணீரானது வேண்டும்.
3. செடிக்கு தண்ணீரை காலை அல்லது மாலையிலே ஊற்ற வேண்டும். அது செடியின் உறிஞ்சும் தன்மையைப் பொறுத்தே ஊற்ற வேண்டும். காலையில் ஊற்ற வேண்டும் என்றால் அதிகாலையிலே ஊற்ற வேண்டும். ஏனெனில் செடியானது தண்ணீரை உறிஞ்ச வேண்டும். இல்லையென்றால் தண்ணீரானது சூரியனால் உறிஞ்சப்பட்டு, செடிக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். ஆகவே தண்ணீரை ஊற்ற சிறந்த நேரம் அதிகாலையில் அல்லது மாலையிலே சிறந்தது.
4. சில செடிகள் இயற்கையிலேயே நிலங்களில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சி வாழும். அத்தகைய செடிகள் தண்ணீர் இல்லாமல் கூட சில நாட்கள் வாழும். ஆகவே அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றாமல், வாரத்திற்கு இருமுறை ஊற்றினாலே போதுமானது.
5. நிலத்தின் தன்மையை பார்க்க வேண்டும். தோட்டமண் அல்லது களிமண் உள்ள நிலமானது தண்ணீரை சேகரித்துக் கொண்டு, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலமே செடிகள் வளர ஏற்றது. வறண்ட நிலத்தில் செடிகளை வைத்தால், அவை செடிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, பின் இலைகள் கொஞ்ச காலத்தில் மஞ்சளாக மாறிவிடும்.
6. செடிகளை வைத்துள்ள இடத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டின் வெளியே வைக்கக் கூடிய செடி என்றால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுவே வீட்டின் உள்ளே வைக்கக் கூடிய செடி என்றால் அதற்கு தினமும் தண்ணீரானது ஊற்ற தேவையில்லை. மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் செடிகளுக்கு காலநிலையைக் பொறுத்தும் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதுவும் கோடைகாலம் என்றால் தினமும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறெல்லாம் தண்ணீர் விட்டு செடிகளைப் பராமரித்தால், செடிகள் வண்ண வண்ண மலர்களில் பூத்து குலுங்குவதோடு, செழிப்போடு நன்கு வளரும்.



Click it and Unblock the Notifications