உங்க வீட்டுச் செடி உயிரோடு இருக்கா, இல்லை செத்துப் போச்சா?

By Maha

Signs to identify a dying plant
இந்த உலகில் பிறந்த எல்லா உயிருக்கும் இறப்பு என்பது ஒன்று உண்டு. அது மனிதனானாலும் சரி, மிருகமானாலும் சரி, செடிகளானாலும் சரி இறப்பு இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி இறப்பதற்கு முன் ஏதேனும் அறிகுறிகள் தெரியும். அதேபோல் நம் வீட்டில் வளர்க்கும் செடிகளின் வாழ்நாள் முடிவதையும் நம்மால் அறிய முடியும். அது எப்படி என்று பார்க்கலாமா?

1. செடிகள் வாடி, வதங்கி போவதில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று மிகவும் பழைய இலைகள் உதிர்ந்து, புதிய இலைகள் முளைக்க உதிர்வது. மற்றொன்று செடிகளின் வாழ்நாள் முடிந்துவிட்டால் வாடி உதிர்வது.

2. இலைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறுதல். சில சமயங்களில் வாழ்நாள் முடிந்தால் இலைகளின் நிறமானது மஞ்சள் நிறமாகும். இல்லையென்றால் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக படுவதாலும் இலைகள் மஞ்சள் நிறத்தை அடையும்.

3. செடிகளில் இருந்து இலைகள் கொட்டுதல். பொதுவாக இலைகளானது இலையுதிர் காலத்திலேயே அதிகம் கொட்டும். இப்படி இலையுதிர் காலத்தில் கொட்டாமல் மற்ற நேரங்களில் இலைகளானது அதிகம் கொட்டினால், செடிகளில் ஏதோ பிரச்சனை என்று அறியலாம்.

4. செடிகளின் ஒரு பகுதி கெடுதல். திடீரென்று செடிகளின் ஒரு பகுதி கெட்டுப் போய்விடும். இதற்கு அளவுக்கு அதிகமான நீரில் இருப்பதாலும், ஏதேனும் ஒரு பூச்சி செடியை அழித்துக் கொண்டிருப்பதுமே காரணம். அந்த செடி பூச்சியால் அழியாமல் இருக்க, அந்த செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம் அல்லது பூச்சி அரிக்கப்பட்ட பகுதியை நீக்கலாம். முக்கியமாக செடிகளின் வேர் பகுதி அழிந்தால் செடியானது கண்டிப்பாக அழிந்துவிடும்.

5. ஒரு சில செடிகள் பழங்களை தந்ததும் இறந்துவிடும். முதலில் செடியானது பூக்கும், பின் காய் ஆகி பழம் ஆகும். பழம் வந்ததும் செடியானது சத்துக்களை இழந்து இறந்துவிடும். இதற்கு உதாராணமாக வாழைமரத்தைக் கூறலாம்.

இவ்வாறெல்லாம் உங்கள் வீட்டுச் செடியிலும் வித்தியாசம் தெரிகிறதா என்று கூர்மையாக கவனித்துப் பார்த்து உங்கள் செடியையும் அழியாமல் பாத்துக்கோங்க!

Story first published: Wednesday, June 6, 2012, 13:37 [IST]
Desktop Bottom Promotion