Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை செடி வளர்ப்பு!

மருத்துவ குணம்
கற்றாழையின் இலையில் 'அலோயின்" 'அலோசோன்" போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. 'அலோயின்" வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. வீட்டுதோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் எளிதில் மருத்துவ சிகிக்சை செய்துகொள்ளலாம் என்பதால் பெரும்பாலோனோர் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கின்றனர்.
மண் வளம் அவசியம்
வீட்டுத் தோட்டங்களில் கற்றாழை வளர்ப்பது அழகுக்காக மட்டுமின்றி மருந்துக்காகவும்தான். எனவே அவற்றை சரியான முறையில் நடவு செய்து பாதுகாப்பது அவசியம். கற்றாழையில் குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை, என மூன்று வகை உள்ளது.
கற்றாழை பயிரிட தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
தொழு உரம் போதும்
நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது.
தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் செடிகள் நன்கு செழித்து வளரும் வீட்டுத் தோட்டம் அழகு பெருவதோடு சரும பாதுகாப்பிற்குத் தேவையான அதிக கூழ் நிறைந்த கற்றாழையும் கிடைக்கும்.
ஆரோக்கியமான செடிகள்
செடிகளை நடவு செய்யும் முன்பு தரமான செடிகளாக பார்த்து வாங்கவேண்டும். வேர்கள் சரியான முறையில் உள்ளதா? செடிகளை பூச்சிகள் எதுவும் தாக்கியுள்ளதா என்பதை பார்த்து வாங்கி நடவு செய்வது அவசியம். கற்றாழைச் செடிகளுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. இரு வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. அடிக்கடி செடிகளின் வேர் பகுதிகளை கவனிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நோய் தாக்குதலை கண்டறிந்து அதற்கேற்ப மருந்து தெளிக்கமுடியும். தோட்டங்களின் நடுப்பகுதியில் கற்றாழை வளர்ப்பது அழகை அதிகரிக்கும் அதனைச் சுற்றி பல்வேறு செடிகளை வளர்க்கலாம். தோட்டத்திற்கு கூடுதல் அழகு தரும்.



Click it and Unblock the Notifications











