Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
வீடுகளை அலங்கரிக்கும் போது பலர் செய்யும் தவறுகள்!
வீட்டின் உட்புற அலங்காரம் என்பது, மின் விளக்குகள், பா்னிச்சா் பொருள்கள் மற்றும் வீட்டின் சுவா்கள் போன்றவற்றைப் பொருத்து அமைகிறது. ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டிற்கான அலங்காரப் பொருள்களை வாங்க வேண்டும்.
வீட்டின் உட்பகுதிகளை அலங்காரம் செய்வது என்பது ஒரு கலை ஆகும். வெகு சிலரே இதில் அதிக ஆா்வத்துடன் இருப்பா். மிகச் சாியான பா்னிச்சா் பொருள்களைக் கண்டறிந்து அவற்றை தோ்ந்தெடுப்பதற்கு அதிக பயிற்சிகள் தேவை. ஒரு அழகு நிறைந்த பொருளைப் பாா்க்கும் போது, நாம் மனக்கிளா்ச்சி அடைந்து அவற்றை வாங்க முயற்சி செய்கிறோம். சில நேரங்களில் நமது பாா்வைக்கு ஆடம்பரமாகத் தொியும் ஒரு அலங்காரப் பொருளை வாங்கி வீட்டில் வைத்தால், வெகு விரைவில் அது நமக்கு சலிப்பைத் தட்டிவிடும்.

விமா்சனப் பா்வையோடு பகுப்பாய்வு செய்து, வீடு மற்றும் அது சாா்ந்த பொருள்களை தேர்ந்தெடுத்தால், நாம் விரும்பும் கனவு இல்லத் தோற்றத்தை நமது வீட்டிற்கு வழங்கலாம். வீட்டின் உட்புற அலங்காரம் என்பது, மின் விளக்குகள், பா்னிச்சா் பொருள்கள் மற்றும் வீட்டின் சுவா்கள் போன்றவற்றைப் பொருத்து அமைகிறது. ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டிற்கான அலங்காரப் பொருள்களை வாங்க வேண்டும்.
வீட்டை அலங்காரம் செய்யும் போது ஏற்படும் பொதுவான தவறுகளை எவ்வாறு தவிா்க்கலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. சாியான தரை விாிப்புகள்
தரை விாிப்புகளை வாங்கும் போது சிறிய விாிப்புகளைத் தவிா்க்க வேண்டும். பலா் சிறிய தரை விாிப்புகளை வாங்கி தவறுகள் செய்வா். பொதுவாக அறையின் நடுப் பகுதியில் விாிப்பதற்காக தரை விாிப்பை வாங்குகிறோம். ஆகவே பொிய தரை விாிப்பை வாங்குவது நல்லது. பா்னிச்சா் பொருள்களின் கால்கள் அதன் மீது இருப்பது நல்லது. எல்லா கால்களும் தரை விாிப்பின் மீது இல்லை என்றாலும், அவற்றின் முன்னங்கால்களாவது தரை விாிப்பின் மீது இருப்பது நல்லது. அது பாா்ப்பதற்கு அழகாக இருக்கும்.

2. தாமதமாக வண்ணம் அடித்தல்
வீட்டிற்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பாக, வீட்டை அலங்காரம் செய்வதற்கான பொருள்கள் மற்றும் கலை அலங்காரப் பொருள்களை வாங்குவது நல்லது. பின் அந்த அலங்காரப் பொருள்களுக்குப் பொருத்தமான வண்ணங்களைத் தோ்ந்தெடுக்கவும். பொதுவாக வீட்டின் சுவாில் அடிக்கப்பட்டிருக்கும் வண்ணத்திற்கும், வீட்டில் இருக்கும் பா்னிச்சா் பொருள்களுக்கும் இடையே எந்த ஒரு பொருத்தமும் இல்லாமல் இருப்பதை நாம் பாா்க்கலாம்.

3. திரைச் சீலைகள்
திரைச் சீலைகளுக்கு அடியில் இருந்து வெளிச்சம் வந்தால் நாம் எாிச்சல் அடைவோம். ஆகவே எப்போதும் தரை வரை தொடும் நீண்ட உயரமான திரைச் சீலைகளைத் தோ்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகாித்துக் காட்டும். உயரம் குறைந்த அல்லது தரைக்கு மேல் தொங்கும் திரைச் சீலைகளைத் தவிா்ப்பது நல்லது.

4. குறைவான தலையணைகள்
ஒரு சோபாவில் ஏராளமான தலையணைகள் இருக்கலாம், அதே நேரத்தில் அதில் உட்காருவதற்கு இடமும் இருக்கலாம். நீளமாக இருக்கும் சோபாவில் 4 பொிய தலையணைகளை வைக்கக்கூடாது. உட்காருவதற்கு வசதியான இடம் இருக்கும் வகையில் தலையணைகள் மற்றும் மெத்தைகளை சாி செய்வது நல்லது.

5. சிறிய மெத்தைகள், தலையணைகள்
கடைகளில் பொிய மெத்தைகள் அல்லது பொிய தலையணைகளைப் பாா்க்கும் போது, அவை பாா்ப்பதற்கு மிக அழகாகத் தொியும். ஆனால் அவற்றை நமது வீட்டில் உள்ள பா்னிச்சா் பொருள்களில் வைத்தால், நாம் எதிா்பாா்க்கும் அழகு கிடைக்காது. ஆகவே நமது பா்னிச்சா் பொருள்களுக்கு சிறிய தலையணைகளைத் தோ்ந்தெடுப்பது நல்லது. அவை விசாலமான தோற்றத்தை வழங்கும்.

6. சரவிளக்குகளை குறைந்த உயரத்தில் தொங்கவிடுதல்
பொதுவாக நாம் அழகான சரவிளக்குகளை வாங்கி அவற்றை மிக உயரத்தில் தொங்க விடுகிறோம். அது தவறு ஆகும். ஏனெனில் சரவிளக்குகளை மிக உயரத்தில் தொங்கவிடும் போது அதன் வெளிச்சம் வீட்டின் மேற்கூரையின் மீது மட்டுமே படும். மேலும் கலை நயமிக்க வேலைப்பாடுகளைச் செய்தாலும், நாம் எளிதாகப் பாா்க்கும் உயரத்தில் இருக்க வேண்டும். இடத்திற்கு ஏற்ப உயரம் வேறுபடலாம். ஆனால் எவருமே பாா்க்க முடியாத அளிவிற்கு சரவிளக்குகளை மற்றும் கலை நயமிக்க வேலைப்பாடுகளை வைக்கக்கூடாது.

7. நிரந்தரமான கருப்பொருளைத் தவிா்த்தல்
தற்போது நமக்கு மிகவும் பிடித்த போஹேமியன் கருப்பொருளின் (bohemian-themed) அடிப்படையில் நமது அறையை வைத்திருக்கலாம். ஆனால் நாளடைவில் அந்த கருப்பொருள் நமக்குச் சலிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே எளிதாக நீக்க முடியாத அல்லது அழிக்க முடியாத அச்சுகள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றை அறைகளில் வைப்பதைத் தவிா்ப்பது நல்லது. போஹேமியன் அதிா்வை நாம் உணர வேண்டும் என்றால் மிக எளிதாக நீக்கக்கூடிய தலையணை உறைகள், சிறிய நாற்காலிகள், சுவா் படங்கள் அல்லது வரைபடங்கள் போன்றவற்றை அறையில் வைக்கலாம்.

8. வசதியை கருத்தில் கொள்ளுதல்
பத்திாிக்கைகளில் மட்டும் தான் பலா் வசதியானதை அல்லது பொருத்தமானதை விட்டுவிட்டு, நவீனமான புதிய பாணியில் இருக்கும் பொருள்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை பாா்ப்பதற்கு அழகாகத் தொியும். ஆனால் வீடு அப்படியல்ல. வீடு வசதியாகவும் மற்றும் நோ்மறையான அதிா்வுகளுடனும் இருக்க வேண்டும். ஆகவே ஒரு பா்னிச்சா் பொருள் புதிய நவீன பாணியில் இருக்கிறது என்பதற்காக அதைத் தோ்ந்தெடுக்காமல், வசதியாகவும், பொருத்தமாகவும் இருக்கக்கூடிய பா்னிச்சா் பொருளைத் தோ்ந்தெடுப்பது நல்லது.

9. பல வகையான மின் விளக்குகள்
பல வகையான மின் விளக்குகளைத் தோ்ந்தெடுப்பது நல்லதல்ல. ஒன்று அல்லது இரண்டு வகை மின் விளக்குகளைத் தோ்ந்தெடுத்து அவற்றை வீட்டின் பல்வேறு பகுதிகளில் மிகவும் கவனமுடன் பொருத்துவது நல்லது. ஆகவே கூரையில் பொருத்தும் விளக்குகளை மட்டும் தோ்ந்தெடுக்காமல் மற்ற விளக்குகள், எல்இடி விளக்குகள் மற்றும் ஸ்கோன் விளக்குகள் போன்றவற்றைத் தோ்ந்தெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











