இந்த தலைமுறை பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே பருவமடைய காரணம் என்ன? விஞ்ஞானிகள் கூறும் காரணம் இதுதான்...!

சமீபத்திய ஆய்வில், இந்த தலைமுறை பெண்கள் கடந்த தலைமுறை பெண்களை விட முன்கூட்டியே மாதவிடாயை தொடங்கி, அதிக ஒழுங்கற்ற சுழற்சிகளை அனுபவிக்கின்றனர், இது உடல் பருமன் மற்றும் சுற்றுச்சூழல் இரசாயனங்கள் போன்ற காரணிகளால் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த புதிய ஆராய்ச்சியின் படி, இளம் தலைமுறையினருக்கு குறைந்த வயதிலேயே மாதவிடாய் முன்கூட்டியே தொடங்குகிறது. இந்த ஆய்வு 71,341 பெண்களை உள்ளடக்கிய ஆப்பிள் மகளிர் சுகாதார ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

Why Are Girls Hitting Puberty At Very Young Age in Tamil

1950 மற்றும் 1969 க்கு இடையில் பிறந்த பெண்களின் பருவமடையும் சராசரி வயது 12.5 லிருந்து 2000 மற்றும் 2005 க்கு இடையில் பிறந்தவர்களுக்கு 11.9 ஆக குறைந்துள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது இந்த வயது மேலும் குறைந்துள்ளது.

முதல் மாதவிடாய்க்குப் பிறகு மாதவிடாய் சுழற்சிகள் சீராக மாற எடுத்துக்கொள்ளும் நேரமும் அதிகரித்துள்ளது, இரண்டு ஆண்டுகளுக்குள் குறைவான பெண் குழந்தைகள் மட்டுமே சீரான நிலையை அடைகிறார்கள், மேலும் பலர் மூன்று முதல் நான்கு வருடங்கள் கழித்தும் சீரான நிலையை அடைவதில்லை.

ஆசிய, கறுப்பின மற்றும் பல இனத்தைச் சேர்ந்த பெண்கள் வெள்ளை இன பெண்களுடன் ஒப்பிடும்போது முதல் மாதவிடாயை விரைவிலேயே பெறுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. "ஆரம்பகால மாதவிடாய் என்பது இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பாதகமான உடல்நல விளைவுகளின் அதிக ஆபத்துடன் தொடர்புடையது," என்று இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு இளம் வயது மாதவிடாய் ஏற்படக் காரணங்கள்

குழந்தை பருவ உடல் பருமன் முன்கூட்டியே பருவமடைவதற்கான ஆபத்து காரணியாகும், இது பெண்கள் தங்கள் முதல் மாதவிடாயை முன்னதாகவே அனுபவிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். இருப்பினும், முதல் மாதவிடாயின் வயது குறைவது உடல் பருமன் தொற்றுநோய்க்கு முன்பே நடந்து வருகிறது, இது மற்ற காரணிகளும் இந்த போக்கை பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சுமார் 17,000 சிறுமிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் இளம் வயதிலேயே பருவமடைவதைக் கண்டறிந்தனர், மற்ற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெண் குழந்தைகல் இளம் வயதிலேயே பருவமடைவதைக் காட்டுகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இளம் பெண்களின் பருவமடைதலுக்கு உடல் எடையைத் தவிர வேறுசில விஷயங்களும் காரணமாக இருக்கக்கூடும்.

நுகர்வோர் பொருட்களில் பயன்படுத்தப்படும் தொடர்ச்சியான இரசாயனங்களான "forever chemicals" தாக்கம் கருத்தில் கொள்ளப்படும் ஒரு முக்கிய காரணியாகும். இந்த நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் காற்று மாசுபாடுகளுடன் சேர்ந்து, கடந்த தலைமுறைகளை விட தற்போதைய இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு பங்களிக்கக்கூடும். இந்த ஆபத்திற்கான வேறுசில காரணிகளை மேற்கொண்ட பார்க்கலாம்.

-ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்ட கோழி உணவு மற்றும் இறைச்சியை உண்ணுதல். மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் தானியங்களை உண்ணுதல்.

- பிஸ்பெனால் ஏ (பிபிஏ) போன்ற பிளாஸ்டிக்கில் உள்ள செயற்கை இரசாயனங்கள்

- குழந்தை பருவத்தில் கடுமையான மன அழுத்தம் அல்லது குழந்தை தன்னைச் சுற்றியுள்ள மோதல்களுக்கு உணர்திறன் கொண்டது.

- கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது சோயா டயட்டின் அதிகப்படியான பயன்பாடு, கருப்பையில் பைட்டோ ஈஸ்ட்ரோஜனுக்கு வெளிப்படுவதற்கு காரணமாகிறது, இது கருவின் நிறுவன நிலை மற்றும் குழந்தையின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கலாம்.

- ஃப்ளூரைடு - பெரும்பாலான பொது நீர் விநியோகங்களில் சேர்க்கப்படும் ஃப்ளூரைடு, மெலடோனின் சுழற்சியின் அளவைக் குறைத்து விரைவில் பருவமடைவதைத் தூண்டுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, August 29, 2024, 18:00 [IST]
Desktop Bottom Promotion