Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
காலையில் தூங்கி எழுந்ததும் கண்ணு வீக்கமா இருக்கா?
இரவு தூங்கி காலை எழும்போதே கண்களில் வீக்கம் பார்க்கலாம். திடீரென்று இவை உண்டாக என்ன காரணம். இந்த வீக்கத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. போதுமான தூக்கம் இல்லாத போது கண்களை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்து அவை திரவத்தை கசியவிடலாம், இது தோலின் கீழ் உருவாகலாம். இந்த திரவ கலவை கண்களை சுற்றியுள்ள பகுதியை வீக்கமாக தோன்ற செய்யும். தூக்கமின்மையால் வரும் வீங்கிய கண்கள் பிரச்சனையை சரி செய்ய தினசரி போதுமான அளவு தூங்க வேண்டும்..

2. சில சமயங்களில் நாம் அழும் போது கண்களை சுற்றியுள்ள பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் காணப்படும். இது அப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம், இதனால் அவற்றில் கசிவு ஏற்படும். தோலுக்கு அடியில் உள்ள அதிகப்படியான திரவம் வீக்கத்தை உருவாக்கலாம். அழுவதை நிறுத்தி விட்ட சில நிமிடங்களுக்கு பிறகு கண்களில் கூல் கம்ரசர்(cool compress-ஐ) பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
3. வீங்கிய கண்கள் என்பது பருவகாலத்தில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் இருக்கலாம்.. சிலருக்கு மழைக் காலத்தில்தான் அலர்ஜி ஏற்படும்.. உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்..
4. ஆல்கஹால் பழக்கம் இருந்தால் உங்கள் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும் கண்களை உலர வைக்கும். காரம் அதிகம் உள்ள உணவுகள் எடுப்பவர்களுக்கு கண்களில் நீர் தேங்குவதால் அவர்களுக்கு சிறிது வீக்கத்தை தருகிறது.
5. கண்களைச் சுற்றிய வீக்கத்தில் ஒரு கண்ணைச் சுற்றி மட்டும் வீங்கியிருந்தால் அது அலர்ஜியாக இருக்கலாம். இரண்டு கண்களையும் சுற்றி வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலருக்கு ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையாலும் இப்படி நிகழலாம். எனவே அப்படி ஏதேனும் மருந்துகள் எடுப்பவராக இருந்தால் அவை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications