Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம்
கண் வறட்சி என்றால் என்ன? ஆபிஸில் வேலை செய்பவர்கள் இந்த ஆபத்தான நிலையை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
நம் உடலில் நீரின் அளவு குறையும் போது அது நம் கண்களிலும் பிரதிபலிக்கிறது. வறண்ட கண்கள் என்பது பெயரிலேயே உள்ளது போல, நம் கண்கள் கண்ணீரை உருவாக்க முடியாமல் அல்லது கண்ணீர் மிக விரைவாக ஆவியாக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. இந்த நிலை ஏற்பட்டால், கண்ணீரால் நம் கண்களை உயவூட்ட முடியாது, இது கண்களை சுத்தம் செய்வதை மேலும் தடுக்கிறது.
கண்ணீர் துளிகள் கண் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கண்களில் கண்ணீர் இல்லாதது வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கண் மேற்பரப்பையும் சேதப்படுத்தும். கண்ணீர் நம் கண்களை ஈரமாக்குகிறது, நம் கண்களை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைத்திருக்க கண்ணீர் அவசியமானது.

குறைவாக கண் சிமிட்டுவது அதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். நீண்ட திரை நேரம் உங்கள் கண்கள் வறண்டு போக ஒரு முக்கிய காரணம். கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வது உங்கள் கண்ணீரின் சமநிலையை மாற்றக்கூடும். 2014 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், கணினியில் நீண்ட நேரம் செலவழிப்பவர்களின் கண்ணீரில் குறைந்த அளவு சளி இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் நீண்ட நேரம் கணினியில் பணிபுரியும் 10 பேரில் ஒருவருக்கு கண்டிப்பாக கண் வறட்சி இருந்தது.
வறண்ட கண்களின் அறிகுறிகள்
- எரிச்சல்
- சிவத்தல்
- கண்களில் நீர் தேங்கி நிற்பது
- படிக்கும் போது அசௌகரியம்
- மங்களான பார்வை
- அரிப்பு
- வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது
2020 அறிக்கையின்படி, வறண்ட கண்கள் உங்கள் பார்வை செயல்பாட்டைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த நிலையை எப்படி தடுப்பது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
20-20-20 ரூல்
சில நேரங்களில் நீண்ட நேரம் நாம் திரையை வெறித்துப் பார்க்கும்போது, அதிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும். 20-20-20 விதியின் படி, ஒருவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடி இடைவெளி எடுத்து, திரையைத் தவிர வேறு ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வையை செலுத்தலாம். அந்த புதிய புள்ளி கிட்டத்தட்ட 20 அடி தூரத்தில் இருந்தால் நல்லது. இது கண் அழுத்தத்தை சற்று குறைக்க உதவும்.
கண் சிமிட்டல்
நாம் திரையை உற்று நோக்கும்போது அல்லது எதையாவது படிப்பதில் மூழ்கி இருக்கும் போது, நாம் அடிக்கடி இமைக்காமல் இருப்போம். சீரான இடைவெளியில் கண் சிமிட்டுவது கண்களில் உகந்த ஈரப்பதத்தை பராமரிக்க உதவும்.
வெளிச்சம் முக்கியம்
நீங்கள் படிக்கும் நேரம் அல்லது திரை நேரம் என எதுவாக இருந்தாலும், நன்கு ஒளிரும் அறைகளில் இருப்பது மிகவும் முக்கியம். தற்போது நம்மில் பலர் போர்வைகளுக்கு அடியில் இருந்து ஸ்க்ரோலிங் செய்வது அல்லது மங்கலான வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வேலை செய்வது போன்ற தவறுகளை செய்கிறோம், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். திரைகளில் இருந்து வரும் நீலநிற வெளிச்சம், வெளிச்சம் குறைந்த சுற்றுப்புறங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தூரத்தை பராமரிக்க வேண்டும்
கண்களில் இருந்து திரைக்கு போதுமான தூரத்தை பராமரிப்பது மிக முக்கியமானது. திரையில் இருந்து உகந்த தூரம் இல்லாமல் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று கணினி பார்வை நோய்க்குறி அல்லது டிஜிட்டல் கண் திரிபு என்று அழைக்கப்படுகிறது. எனவே உங்களுக்கும் திரைக்கும் இடையில் போதுமான தூரம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

