Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொரோனா வைரஸை ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ அழிக்க உதவுமா? உண்மை என்ன?
சமீபத்தில், ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' அல்லது HCQ என்ற இந்த மருந்து குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த மருந்து என்ன, இது ஏன் திடீரென்று பரபரப்பான விஷயமாக மாறியது?
சமீபத்தில், 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' அல்லது HCQ என்ற இந்த மருந்து குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த மருந்து என்ன, இது ஏன் திடீரென்று பரபரப்பான விஷயமாக மாறியது என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.

மலேரியா சிகிச்சைக்கான மிகப் பழமையான மருந்துகளில் ஒன்று தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது HCQ ஆகும். இது அனைத்து மருத்துவக் கடைகளிலும் உடனடியாகக் கிடைக்கக் கூடியது. முடக்கு வாதம் மற்றும் லூபஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைமைகளை நிர்வகிக்க இந்த மலேரியா எதிர்ப்பு மருந்து உதவியாக இருக்கும்.
திடீரென்று இது வெளிச்சத்திற்கு வந்ததற்கான காரணம், HCQ இன் ஏற்றுமதியை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு மற்றும் அது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது. இந்த சர்ச்சை குறித்து தெளிவு பெற முழுமையான கட்டுரையைப் படியுங்கள்.

கொரோனா வைரஸ் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
#1
COVID-19 என்னும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இது தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

#2
ஆய்வக செல் சோதனையில் சீன ஆய்வாளர்கள், கொரோனா வைரஸ், SARS-CoV-2 போன்ற வைரஸ்கள் உடலின் செல்களுக்குள் நுழைந்து தொற்றுக்கள் ஏற்படுவதை தாமதமாக்கியது தெரிய வந்ததாக கூறினர்.

#3
பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பெரும்பாலான நோயாளிகளின் மேல் சுவாசப் பாதைகளில் உள்ள வைரஸை அகற்றுவதில் திறமையான மருந்து என கண்டறியப்பட்டது.

#4
சீனா மற்றும் தென் கொரியாவில் உள்ள சில மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்தினர். எனவே இந்த மருந்தை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக கருதுகின்றனர்.

கொரோனா வைரஸிற்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த நிபுணர் கருத்துகள்:
#1
இது ஒரு சமூக மட்டத்தில் பயனுள்ளதாக இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை - இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

#2
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது HCQ-வின் வெற்றிக்கான சான்றுகள் மெல்லியவை - டாக்டர் அந்தோனி ஃபாசி, அமெரிக்காவின் தொற்று நோய்கள் பற்றிய சிறந்த நிபுணர்.

#3
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கடுமையான பக்க விளைவை உண்டாக்கக்கூடியவை. உதாரணமாக, இது இதய தாளப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது - டாக்டர் பேட்ரிஸ் ஹாரிஸ், தலைவர், அமெரிக்க மருத்துவ சங்கம்.

#4
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளின் செயல்திறனுக்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. அவை மருத்துவ பரிசோதனைகளில் அல்லது அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் - ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்.

சர்ச்சை
* HCQ-வின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
* மார்ச் 22-இல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு நடவடிக்கையாக HCQ-வைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்தது.
* மார்ச் 27-இல் பதுக்கலைத் தடுப்பதற்கு இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பரிந்துரைக்கும் மருந்தாக கூறியது.
* ஏப்ரல் 4-இல் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை தடை செய்தது.
இதனால் தன்னுடல் தாக்க நோய்களுக்கான நோயாளிகளுக்குத் தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கிடைக்காததற்கு இது வழிவகுத்தது.

சர்வதேச அழுத்தம்
அமெரிக்கா மற்றும் பிரேசில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியா மீது அழுத்தம் கொடுக்கின்றன. தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கான உத்தரவை அமெரிக்கா விதித்ததால், தடையை நீக்கி மருந்துகளை வெளியிடுமாறு டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டார். இதன் பின்னர், ஏப்ரல் 7 ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வழக்கு அடிப்படையில் வெளியிட இந்தியா முடிவு செய்தது.



Click it and Unblock the Notifications