Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
உணவு தொடர்பான கொரோனா அறிகுறிகள்... இந்த அறிகுறி இருந்தா உடனே டாக்டரை பாருங்க இல்லனா ஆபத்துதான்...!
திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல், எப்போதும் மாறக்கூடிய அறிகுறிகள், அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் இறுதியாக அச்சத்தை பரப்பிய கொரோனா பிறழ்வின் சமீபத்திய கண்டுபிடிப்பு என பல ஆபத்துக்களை சந்தித்தோம்.
COVID-19 ஐ ஆண்டின் மோசமான சிறப்பம்சமாக அழைப்பது தவறல்ல. கொரோனா வைரஸ் நம் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தியது. திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல், எப்போதும் மாறக்கூடிய அறிகுறிகள், அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் இறுதியாக அச்சத்தை பரப்பிய கொரோனா பிறழ்வின் சமீபத்திய கண்டுபிடிப்பு என பல ஆபத்துக்களை சந்தித்தோம். கொரோனவிற்கான தடுப்பூசியை நாம் நெருங்கி இருக்கலாம், ஆனால் இப்போதும் கொரோனா பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

நோய்த்தொற்று உலர்ந்த இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற பொதுவான அறிகுறிகளை முன்வைக்கிறது, நோயாளிகளைக் குழப்பக்கூடிய சில வேறுபட்ட அறிகுறிகளும் உள்ளன.கொரோனா தொற்று உங்களின் உணவு மற்றும் உணவுப் பழக்கத்தையும் பாதிக்கலாம், இது வைரஸ் தொற்றுநோய்களுக்கும் பொதுவானது. கொரோனா நோயாளிகள் உணவுத் தொடர்பாக சந்தித்த அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிறுத் தொல்லைகள்
மூன்று சீன மருத்துவமனைகள் நடத்திய மதிப்பாய்வின் படி, ஒவ்வொரு 5 கோவிட் நோயாளிகளிலும் ஒருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட இரைப்பை குடல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். குடல் நுண்ணுயிரிகளில் COVID-19 இன் தாக்கத்திற்கும், தொற்று மலம் பரவுவதன் மூலம் பரவுவதற்கான திறனுக்கும் இடையே ஒரு வலுவான இணைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் உங்களிடம் நிச்சயமாக COVID-19 இருப்பதைக் குறிக்கவில்லை என்றாலும், உங்கள் சோதனை முடிவுகளைப் பெறும் வரை தனி குளியலறையைப் பயன்படுத்துவது சிறந்தது. இரைப்பை குடல் அறிகுறிகள் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில், இரைப்பை குடல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடலில் இருந்து வைரஸை அழிக்க அதிக நேரம் ஆகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பசியின்மை
வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் உடனடி பசியிழப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. கொரோனவால் வாசனை அல்லது சுவை இழப்பால் பாதிக்கப்படுபவர்களிடம் பொதுவான உணவுப் பொருட்களை ஜீரணிப்பது மிகவும் கடினம். அனோஸ்மியா மற்றும் அபாகியா ஆகியவை பொதுவாக அவர்கள் விரும்பும் விஷயங்களை வெறுக்கச் செய்யலாம், மேலும் பலவீனப்படுத்தலாம் அல்லது நீண்ட காலமாக புலன்களை மாற்றலாம். எனவே இது உங்கள் உணவுப் பழக்கத்தை பாதிக்கும். சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 80% க்கும் மேற்பட்ட COVID + நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் பசியின்மை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எடை இழப்பு மற்றும் மோசமான வளர்சிதை மாற்றத்தில் காணப்பட்ட மற்றொரு பக்க விளைவு, மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படுகிறது.

என்ன சாப்பிடலாம்?
உங்களுக்கு விருப்பமான உணவு அல்லது பானம் எதுவும் இல்லை என்றால், நீங்கள் க்ரீன் டீயைப் பருக முயற்சி செய்யலாம். உண்மையில் க்ரீன் டீயில் SARS-CoV-2 நொதியின் செயல்பாட்டைத் தடுக்கும் திறன் கொண்ட ரசாயன கலவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் வேறு எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ விரும்பவில்லை எனில், நீரேற்றத்துடன் இருக்க இந்த பானம் ஒரு சிறந்த வழியாகும்.

குமட்டல்
வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றே, குமட்டல் என்பது பொதுவாக COVID அறிகுறி அல்ல, ஆனால் தாமதமாக காணப்பட்ட ஒன்று. வுஹானில் 138 நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், காய்ச்சல் உருவாக இரண்டு நாட்களுக்கு முன்னர், 10 சதவீத மக்களுக்கு குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. சிலருக்கு, இது செயலில் தொற்றுநோய்க்கான ஒரே அடையாளமாகவும், பல சந்தர்ப்பங்களில், கடுமையான நோய்த்தொற்றின் அடையாளமாகவும் செயல்படக்கூடும்.

தொண்டைவலி
தொண்டை புண் சளி மற்றும் காய்ச்சல் போன்ற ஒவ்வாமைகளுடன் எளிதில் குழப்பமடையக்கூடும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவது அல்லது வானிலை மாற்றத்தால் தொண்டை புண் ஏற்படலாம், ஆனால் இது கொரோனா தொற்றாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு தொண்டை புண் உங்களுக்கு தொண்டை தொற்று இருப்பதைக் குறிக்கிறது, இது ஃபரிங்கிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒருவர் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதையும் கடினமாக்கும், இது வழிப்பாதைகளை எரிச்சலடையச் செய்யலாம், அல்லது சாப்பிடும்போது வலியைத் தூண்டும். வீக்கத்தைக் குறைக்கக் கூடிய பல சமையலறை பொருட்கள் உள்ளன, ஆனால் உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

வாசனை மற்றும் சுவை இழப்பு
வாசனை மற்றும் சுவை இழப்பு இப்போது COVID-19 இன் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வெளிப்பட்ட பிறகு இரண்டு முதல் 14 நாட்களுக்குள் இந்த அறிகுறி உருவாகலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, செரிமான பிரச்சினைகள், சோர்வு மற்றும் தசை வலி போன்றவற்றைப் போலல்லாமல், உங்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழப்பது வேதனையோ கவலையோ அல்ல. இருப்பினும், அதை குணப்படுத்த எந்த சிகிச்சையும், மருந்தும் இல்லை.வாசனை மற்றும் சுவை உணர்வின் கடுமையான இழப்பை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு, வாசனை பயிற்சி மற்றும் நறுமண எண்ணெய்களின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது, இது பழைய, பழக்கமான நறுமணங்களையும் சுவைகளையும் அங்கீகரிக்க மூளையை 'மாற்றியமைக்க' முடியும்.



Click it and Unblock the Notifications











