Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
அதிர்ச்சி செய்தி: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் புதிய நோய்... அதன் அறிகுறிகள் என்ன?
கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் 10 பேரில் ஒருவர் பேர் வைரஸ் தொற்று அல்லது சேதத்தின் அறிகுறிகளால் பாதிக்கப்படுவார்கள். இது லாங் கோவிட அதாவது நீண்ட கால கோவிட் என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. COVID-19 என்பது ஒரு குளிர் அல்லது காய்ச்சல் போன்ற தொற்று மட்டுமல்ல என்பதற்கான சான்றுகள் தெளிவாக உள்ளன. இது எல்லா வயதினருக்கும், வெவ்வேறு உடல் அமைப்பில் உள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது, மற்றவர்களை விட சிலரை மிகவும் பாதிக்கிறது.

ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தின் அடிப்படையில், இந்த கொடிய சுவாச வைரஸ் நீண்டகால பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பலருக்கு, வைரஸ் சுமை குறைந்துவிட்டிருக்கலாம், ஆனால் இருமல், அரிப்பு தொண்டை மற்றும் சோர்வு போன்ற சில பொதுவான அறிகுறிகள் நோயை எதிர்த்துப் போராடி பல வாரங்களாக தொடர்ந்து இருக்கலாம். மீட்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்குத் திரும்பி வருகிறார்கள், இதய பிரச்சினைகள், மன உளைச்சல் மற்றும் பலவற்றைப் புகார் செய்கிறார்கள்.

ஆய்வு என்ன சொல்கிறது?
இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கொரோனாவின் விளைவுகள் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் 10 பேரில் ஒருவர் பேர் வைரஸ் தொற்று அல்லது சேதத்தின் அறிகுறிகளால் பாதிக்கப்படுவார்கள். இது லாங் கோவிட அதாவது நீண்ட கால கோவிட் என்று அழைக்கப்படுகிறது.

லாங் கோவிட் - ன் அறிகுறிகள்
இந்த ஆய்வில் மொத்தம் 100 நோயாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதில் 32 பேர் மோசமாக நோய்வாய்ப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அதே நேரத்தில் 68 பேர் லேசான அல்லது மிதமான வடிவிலான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். ஆய்வின் படி, பெரும்பாலான நோயாளிகள் ஒரு பக்க விளைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. மிதமான முதல் கடுமையான வரையிலான அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டது.

சோர்வு
கொரானாவில் இருந்து மீண்டபின் உங்கள் கால்களைத் திரும்பப் பெறுவது கடினமாக இருக்கும். COVID உடன், நீண்ட கால சோர்வானது வாரங்கள் மற்றும் மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்பது மிகவும் மோசமான விளைவாகும். COVID- சோர்வு நிபுணர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஆய்வில் ஈடுபட்டுள்ள நோயாளிகளில் கிட்டத்தட்ட 60% நோயாளிகள் குணமடைந்ததைத் தொடர்ந்து சில வாரங்களில் சோர்வு, சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். அவர்களின் சோர்வு மிதமான அல்லது கடுமையானது வரை இருந்ததாக குறிப்பிட்டனர். இது தவிர, சமநிலையற்ற ஆற்றல் அளவுகள் நோயாளிகளுக்கு தசை வலிகள், படபடப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கக்கூடும்.

மூச்சுத்திணறல்
COVID தொற்று எவ்வளவு மோசமானது என்பதைக் குறிக்கும் சில முதன்மை அறிகுறிகளாக மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி ஏற்படலாம். இருப்பினும், நோய்த்தொற்றிலிருந்து மீண்ட சில நோயாளிகளுக்கு, மூச்சுத் திணறல் நீண்ட காலம் இருக்கும். மூச்சுத் திணறல், படபடப்பு போன்ற பிரச்சினைகள் COVID இன் பின்விளைவுகளுக்குப் பிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இது மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது. மூச்சுத் திணறல் இதய சேதம் அல்லது சிக்கலின் விரும்பத்தகாத அறிகுறியாகவும் இருக்கலாம், இது மீண்டும், நோயுடன் நீண்டகால விளைவாக கருதப்படுகிறது.

நினைவகம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி
ஆய்வுகளின் படி மிதமான அல்லது கடுமையான வடிவிலான COVID நோயாளிகளில் 25 சதவீதத்தினர் நரம்பியல் உளவியல் குறைபாடுகள் மற்றும் தொடர்புடைய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர். மீட்பு மையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலவிதமான காரணிகளால் மன உளைச்சல், நினைவக இழப்பு அல்லது நடத்தை ஆகியவற்றில் சிக்கல்கள் தூண்டப்படலாம். இறப்பு, வலி, தூக்கமின்மை, இயக்கம் இல்லாமை அல்லது சரியான தகவல்தொடர்பு, சமூக தனிமை அல்லது மயக்கம் போன்ற பயங்களிலிருந்து, இந்த காரணிகள் அனைத்தும் COVID உடன் ஒரு நபரின் போராட்டத்தை நாம் நினைப்பதை விட மிகவும் கடினமாக்கும்.

மன அழுத்தம் மற்றும் பதட்டம்
லாக்டவுன் நம் வாழ்க்கையில் இதற்கு முன் இல்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் நோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு, அல்லது மீட்கப்பட்டவர்களுக்கு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாக இருக்கும், இதனால் அவர்கள் நீண்டகாலத்திற்கு மனநோய்களால் பாதிக்கப்படுவார்கள். இத்தாலியின் மருத்துவமனைகளில் ஒரு தனி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, சிகிச்சையின் போது காரணிகளின் கலவையும், மீட்கப்பட்ட பின்னரும் நோயாளியின் மன நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறியது. தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம் போன்ற அறிகுறிகள் பொதுவாக காணப்பட்டன. ஆண்களை விட பெண்கள் மன உளைச்சலை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் காணப்பட்டது.

வாழ்க்கைத் தரம் குறைவது
ஏறக்குறைய 69% நோயாளிகள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், 49% லேசான மற்றும் மிதமான தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மறுவாழ்வு பெறுவதில் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டனர். வைரஸ் ஒருவரின் நுரையீரல், இதயம், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடிய பல வழிகளில் இணைப்புகள் உள்ளன. நோயாளியின் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சையில் பொதுவாகக் காணப்பட்ட அறிகுறிகளில் ஒன்று வாழ்க்கைத் தரத்தில் ஒரு கூர்மையான சரிவாகும். இந்த அறிகுறிகளின் தொகுப்பையும் அவற்றின் வாழ்க்கை முறையின் ஒட்டுமொத்த மாற்றங்களையும் கருத்தில் கொண்டு, நிபுணர்கள் கூறுகையில், தொற்றிற்கு பிந்தைய மறுவாழ்வு என்பது COVID சிகிச்சை மற்றும் மீட்புடன் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.



Click it and Unblock the Notifications











