Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
புகைப்பழக்கத்தினால் எப்படி உங்கள் கண்கள் பாதிப்படைகிறது என்ற உண்மை தெரியுமா?
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடுதான். அது கண்களுக்கும் கேடு விளைவிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. என்ன மாதிரியான கண் பாதிப்பை தருகிறது என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
புகை பழக்கம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் புகை பழக்கமானது கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். கண்களில் சிவப்பை ஏற்படுத்தி அதிலிருந்து பார்வை திறனை மங்கச் செய்கிறது.
புகை பழக்கம் இல்லாதவர்களை விட புகை பழக்கம் உடையவர்களுக்கே வயதான காலத்தில் பார்வை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் உள்ள செல்களில் பிரீ ரேடிக்கல்ஸ் அளவை அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை குறைத்து உடலின் உள்ளுறுப்புகளை செயலிழக்க செய்கிறது.அளவை குறைக்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை அதிகரித்தால் போதுமானது. ஆனால் புகையிலையில் உள்ள புகையானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை குறைக்கிறது.
இந்த பிரீ ரேடிக்கல்ஸ் 2 வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.ஒன்று நிலையானது.மற்றொன்று நிலையற்றது, இது அதிக அபாயமானது. பிரீ ரேடிக்கல்ஸ் டி.ன்.ஏ உடன் இணைந்து அணு சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் மூலம் கண்களில் உள்ள லென்ஸில் பாதிப்பு ஏற்படுகிறது.
புகையிலையில் உள்ள புகையானது கண்களை சுற்றி உள்ள ரத்த நாளங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உருவாக்கி நீர் வரச் செய்து ஐ ஏற்படுத்துகிறது.
புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கண்புரை ஏற்பட 2 மடங்கு வாய்ப்பு உள்ளது. ,கண்களின் உள் பகுதியில் அலர்ஜி ,வாஸ்குலர் கோட் ஆகியவை அதிகளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
புகையினால் கண்களின் உள்ளுறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குளுக்கோமா ,பார்வை திறன் மங்குதல் ஏற்படுகிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உடையவர்கள் 2 மடங்கு ரெட்டினா பாதிப்புக்கும்,3 மடங்கு ARMD பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.
புகையிலையில் இருக்கும் சயனைடு கண்களில் உள்ள பார்வைத் திறனுக்கு உதவும் நரம்புகளை பாதிக்கிறது.புகையிலை எந்த வகையில் எடுத்தாலும்(புகை மட்டுமின்றி வேறு வடிவில்) இதே பாதிப்பை ஏற்படுத்தும்.
கண்களின் திசுக்களின் செயல்பாட்டையும்,அமைப்பையும் சேதமடைய செய்கிறது புகையிலை.இந்த வகை குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை வராமல் தடுக்க ஒரே வழி
"புகை பழக்கத்தை இன்றும் என்றும் ஒழிப்போம்"
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














