Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
புகைப்பழக்கத்தினால் எப்படி உங்கள் கண்கள் பாதிப்படைகிறது என்ற உண்மை தெரியுமா?
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடுதான். அது கண்களுக்கும் கேடு விளைவிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. என்ன மாதிரியான கண் பாதிப்பை தருகிறது என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
புகை பழக்கம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் புகை பழக்கமானது கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். கண்களில் சிவப்பை ஏற்படுத்தி அதிலிருந்து பார்வை திறனை மங்கச் செய்கிறது.
புகை பழக்கம் இல்லாதவர்களை விட புகை பழக்கம் உடையவர்களுக்கே வயதான காலத்தில் பார்வை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் உள்ள செல்களில் பிரீ ரேடிக்கல்ஸ் அளவை அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை குறைத்து உடலின் உள்ளுறுப்புகளை செயலிழக்க செய்கிறது.அளவை குறைக்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை அதிகரித்தால் போதுமானது. ஆனால் புகையிலையில் உள்ள புகையானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை குறைக்கிறது.
இந்த பிரீ ரேடிக்கல்ஸ் 2 வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.ஒன்று நிலையானது.மற்றொன்று நிலையற்றது, இது அதிக அபாயமானது. பிரீ ரேடிக்கல்ஸ் டி.ன்.ஏ உடன் இணைந்து அணு சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் மூலம் கண்களில் உள்ள லென்ஸில் பாதிப்பு ஏற்படுகிறது.
புகையிலையில் உள்ள புகையானது கண்களை சுற்றி உள்ள ரத்த நாளங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உருவாக்கி நீர் வரச் செய்து ஐ ஏற்படுத்துகிறது.
புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கண்புரை ஏற்பட 2 மடங்கு வாய்ப்பு உள்ளது. ,கண்களின் உள் பகுதியில் அலர்ஜி ,வாஸ்குலர் கோட் ஆகியவை அதிகளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
புகையினால் கண்களின் உள்ளுறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குளுக்கோமா ,பார்வை திறன் மங்குதல் ஏற்படுகிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உடையவர்கள் 2 மடங்கு ரெட்டினா பாதிப்புக்கும்,3 மடங்கு ARMD பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.
புகையிலையில் இருக்கும் சயனைடு கண்களில் உள்ள பார்வைத் திறனுக்கு உதவும் நரம்புகளை பாதிக்கிறது.புகையிலை எந்த வகையில் எடுத்தாலும்(புகை மட்டுமின்றி வேறு வடிவில்) இதே பாதிப்பை ஏற்படுத்தும்.
கண்களின் திசுக்களின் செயல்பாட்டையும்,அமைப்பையும் சேதமடைய செய்கிறது புகையிலை.இந்த வகை குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை வராமல் தடுக்க ஒரே வழி
"புகை பழக்கத்தை இன்றும் என்றும் ஒழிப்போம்"
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


