Latest Updates
-
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்!
புகைப்பழக்கத்தினால் எப்படி உங்கள் கண்கள் பாதிப்படைகிறது என்ற உண்மை தெரியுமா?
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடுதான். அது கண்களுக்கும் கேடு விளைவிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. என்ன மாதிரியான கண் பாதிப்பை தருகிறது என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
புகை பழக்கம் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோரும் அறிந்த ஒன்று ஆனால் புகை பழக்கமானது கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். கண்களில் சிவப்பை ஏற்படுத்தி அதிலிருந்து பார்வை திறனை மங்கச் செய்கிறது.
புகை பழக்கம் இல்லாதவர்களை விட புகை பழக்கம் உடையவர்களுக்கே வயதான காலத்தில் பார்வை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் உள்ள செல்களில் பிரீ ரேடிக்கல்ஸ் அளவை அதிகரித்து ஆக்ஸிஜன் அளவை குறைத்து உடலின் உள்ளுறுப்புகளை செயலிழக்க செய்கிறது.அளவை குறைக்க ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை அதிகரித்தால் போதுமானது. ஆனால் புகையிலையில் உள்ள புகையானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் அளவை குறைக்கிறது.
இந்த பிரீ ரேடிக்கல்ஸ் 2 வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.ஒன்று நிலையானது.மற்றொன்று நிலையற்றது, இது அதிக அபாயமானது. பிரீ ரேடிக்கல்ஸ் டி.ன்.ஏ உடன் இணைந்து அணு சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் மூலம் கண்களில் உள்ள லென்ஸில் பாதிப்பு ஏற்படுகிறது.
புகையிலையில் உள்ள புகையானது கண்களை சுற்றி உள்ள ரத்த நாளங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உருவாக்கி நீர் வரச் செய்து ஐ ஏற்படுத்துகிறது.
புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கண்புரை ஏற்பட 2 மடங்கு வாய்ப்பு உள்ளது. ,கண்களின் உள் பகுதியில் அலர்ஜி ,வாஸ்குலர் கோட் ஆகியவை அதிகளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
புகையினால் கண்களின் உள்ளுறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குளுக்கோமா ,பார்வை திறன் மங்குதல் ஏற்படுகிறது.புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பழக்கம் உடையவர்கள் 2 மடங்கு ரெட்டினா பாதிப்புக்கும்,3 மடங்கு ARMD பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.
புகையிலையில் இருக்கும் சயனைடு கண்களில் உள்ள பார்வைத் திறனுக்கு உதவும் நரம்புகளை பாதிக்கிறது.புகையிலை எந்த வகையில் எடுத்தாலும்(புகை மட்டுமின்றி வேறு வடிவில்) இதே பாதிப்பை ஏற்படுத்தும்.
கண்களின் திசுக்களின் செயல்பாட்டையும்,அமைப்பையும் சேதமடைய செய்கிறது புகையிலை.இந்த வகை குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை வராமல் தடுக்க ஒரே வழி
"புகை பழக்கத்தை இன்றும் என்றும் ஒழிப்போம்"
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


