Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
நீங்கள் ஏன் கட்டாயம் வாழை இலையில் சாப்பிட வேண்டும்? எதனால்?
வாழை இலையில் அந்த காலத்தில் ஏன் சாப்பிட்டார்கள் என்பதற்கான காரணமும், அதில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் வாழை இலையில் சாப்பிட்டு இருப்பீர்கள். அதிலும் ரசம் சாதம் வாழை இலையில் சாப்பிடும்போது, ரசமோடு இலையின் வாசமும் கலந்து, அது தரும் ருசிக்கு பீஸா பர்கர் எல்லாம் ஓடிவிட வேண்டும்.

ருசி மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் தரும் வாழை இலையில் சாப்பிடுவதை எப்படி அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கணித்தார்கள் என்பது ஆச்சரியம்தான். எதனால் அந்த காலத்தில் வாழை இலையை சாப்பிடச் சொன்னார்கள் என பார்ப்போமா?

கிருமி நாசினி :
இது அற்புதமான கிருமி நாசினி. சுட சுட உணவுகளையும், பொங்கலையும் இதில் சாப்பிடுவதால் ருசியோடு இதன் சத்துக்களும் நமது உடலுக்கு போய் சேர்கிறது. குடலில் தங்கும் கிருமிகளை கொல்கிறது.

நச்சு முறிவு :
நாம் சாப்பிடும் உணவுகளில் நச்சிருந்தால் அவற்றை முறிக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. ஆகவேதான் அந்த காலத்தில் வாழை இலையில் உணவை சாப்பிட்டார்கள்.

சருமம் மின்னும் :
ஆரோக்கியமட்டுமல்ல. அழகுக் கூட்டி தரும். வாழை இலை. தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளக்கு. மந்தம், பித்தம் குறையும். சுருக்கங்கள் தள்ளிப் போகும்.

வயிற்றுப் புண் :
வாழை இலையிலுள்ள குளோரோஃபில் உணவுகளை எளிதில் ஜீரணம்டையச் செய்யும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.

உணவு கெட்டுபோகாது :
வாழை இலையில் உணவை கட்டுவதால் கெட்டுப் போகாது. நீண்ட நேரம் வரை தாங்கும். இது பாதுகாப்பானதும் கூட.

கண் பார்வை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஆயுள் கூடும் :
வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.



Click it and Unblock the Notifications