Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
நீங்கள் ஏன் கட்டாயம் வாழை இலையில் சாப்பிட வேண்டும்? எதனால்?
வாழை இலையில் அந்த காலத்தில் ஏன் சாப்பிட்டார்கள் என்பதற்கான காரணமும், அதில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் வாழை இலையில் சாப்பிட்டு இருப்பீர்கள். அதிலும் ரசம் சாதம் வாழை இலையில் சாப்பிடும்போது, ரசமோடு இலையின் வாசமும் கலந்து, அது தரும் ருசிக்கு பீஸா பர்கர் எல்லாம் ஓடிவிட வேண்டும்.

ருசி மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் தரும் வாழை இலையில் சாப்பிடுவதை எப்படி அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கணித்தார்கள் என்பது ஆச்சரியம்தான். எதனால் அந்த காலத்தில் வாழை இலையை சாப்பிடச் சொன்னார்கள் என பார்ப்போமா?

கிருமி நாசினி :
இது அற்புதமான கிருமி நாசினி. சுட சுட உணவுகளையும், பொங்கலையும் இதில் சாப்பிடுவதால் ருசியோடு இதன் சத்துக்களும் நமது உடலுக்கு போய் சேர்கிறது. குடலில் தங்கும் கிருமிகளை கொல்கிறது.

நச்சு முறிவு :
நாம் சாப்பிடும் உணவுகளில் நச்சிருந்தால் அவற்றை முறிக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. ஆகவேதான் அந்த காலத்தில் வாழை இலையில் உணவை சாப்பிட்டார்கள்.

சருமம் மின்னும் :
ஆரோக்கியமட்டுமல்ல. அழகுக் கூட்டி தரும். வாழை இலை. தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளக்கு. மந்தம், பித்தம் குறையும். சுருக்கங்கள் தள்ளிப் போகும்.

வயிற்றுப் புண் :
வாழை இலையிலுள்ள குளோரோஃபில் உணவுகளை எளிதில் ஜீரணம்டையச் செய்யும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.

உணவு கெட்டுபோகாது :
வாழை இலையில் உணவை கட்டுவதால் கெட்டுப் போகாது. நீண்ட நேரம் வரை தாங்கும். இது பாதுகாப்பானதும் கூட.

கண் பார்வை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஆயுள் கூடும் :
வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.



Click it and Unblock the Notifications