தூங்கி எழுந்ததும் தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது எதனால் தெரியுமா?

நமது உடலில் நடக்கும் சில விஷயங்களே ஏன் நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது என வியப்படைய செய்யும். அதில் ஒன்று தான் சில சமயங்களில் தூங்கி எழும் போது தொப்புளில் உருவாகி இருக்கும் பஞ்சு பந்து.

நமது உடலில் நடக்கும் சில விஷயங்களே ஏன் நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது என வியப்படைய செய்யும். அதில் ஒன்று தான் சில சமயங்களில் தூங்கி எழும் போது தொப்புளில் உருவாகி இருக்கும் பஞ்சு பந்து. இது ஏன் உருவாகிறது, எதனால் உருவாகிறது என பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

தொட்டதற்கு எல்லாம் ஆய்வுகள் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இதுக்குறித்து ஆய்வுகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி, தொப்புளில் இந்த பஞ்சு பந்து உருவாவது ஏன் என விடையும் கண்டறியப்பட்டுவிட்டது.

Cover Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேதியியலாளர்!

வேதியியலாளர்!

ஆஸ்திரிய வேதியியலாளர் ஜியார்ஜ் (Georg Steinhauser) என்பவர் பல வருடங்களாக விடையில்லாமல் புதிராக திகழ்ந்து வந்த தொப்புளில் பஞ்சு போன்றது உருவாவது ஏன் என்பதை மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டறிந்தார்.

பஞ்சு!

பஞ்சு!

தினமும் உறங்கி எழும் போது சில சமையங்களில் தொப்புளில் முடிகளுக்கு நடுவே பஞ்சு பந்து போன்ற ஒன்று உருவாகும். பலரும் இது சட்டை அல்லது போர்வையில் இருந்து உறிஞ்சப்பட்டு உருவாகிறது என்று தான் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு!

ஆராய்ச்சி!

ஆராய்ச்சி!

டாக்டர். ஜியார்ஜ் ஏறத்தாழ தொப்புளில் உருவான இதுப்போன்ற 503 பஞ்சு பந்துகளை சேகரித்து ஆராய்ச்சி ஒன்று நடத்தினார். ஒவ்வொரு பந்துகளும் ஏறத்தாழ ஒரு கிராம் எடை கொண்டிருந்தது. ஒரு பந்து அதிகபட்சமாக 7.5 கிராம் எடை கொண்டிருந்தது.

வேதியல் ஆய்வு!

வேதியல் ஆய்வு!

வேதியாலாளர் ஜியார்ஜ் இந்த பஞ்சு பஞ்சு முற்றிலும் காட்டான் உருவானது அல்ல. இவை இறந்த சருமத்தின் செல்கள், கொழுப்பு வியர்வை மற்றும் தூசினால் உருவாகிறது என கண்டறிந்து கூறினார்.

முடியில் தொடங்கி...

முடியில் தொடங்கி...

வேதியல் ஆராய்ச்சியாளர் ஜியார்ஜ், "இது சின்ன தூசாக முடிகளில் உருவாகி, முடிவில் மெல்ல, மெல்ல தொப்புளில் பஞ்சு பந்து போல உருவாகி தொப்புளுள் உறிஞ்சப்பட்டு சிக்கிக் கொள்கிறது" என தெரிவித்திருந்தார்.

ஆய்விடம்!

ஆய்விடம்!

இந்த ஆய்வு வியென்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. மேலும், இந்த பஞ்சு பந்து உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், வயிறு பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கினால் போதுமானது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழப்பம்!

குழப்பம்!

இந்த ஆய்வில் மொத்தம் 5000 பேர் கலந்துக் கொண்டனர். தொப்புளில் உருவாகும் பஞ்சு பந்து சிலருக்கு அதிகளவிலும், சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு முற்றிலும் உருவாகாமலும் இருந்தது.

கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

மிஸ்டர். பார்கர் என்பவர் கடந்த 1984-ம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் (2010 வரை) தொப்புள் சுற்றில்யுள்ள முடிகளில் இருந்து உருவாகும் இந்த பஞ்சு பந்துகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion