Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிப்பது எதன் அறிகுறிகள் என தெரியுமா உங்களுக்கு?
ரத்தத்தில் வெள்ளையணுக்கள் குறைந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும். அதே நேரம் அதிகமாக காணப்பட்டால் உடலில் ஏதோ பாதிப்பு என்பதன் அறிகுறி . அவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
உடலுக்குள் கிருமிகள் அல்லது சம்பந்தமில்லாத ஏதாவது பொருள் புகுந்துவிட்டால் வெள்ளையணுக்கள் அவற்றை கண்டறிந்து அவற்றுடன் போராடி வெளியே அனுப்பும். இதுதான் வெள்ளையணுக்களின் வேலை. சிப்பாய் என்று சொல்லலாம்.
இந்த வெள்ளையணுக்கள் அதிகரித்தால் நல்லதுதானே. இதனால் கிருமிகள் உடலில் தொற்றாது என நீங்கள் நினைத்தால் தவறு.

அது மட்டும் காரணமிருக்காது. வேறு ஏதாவது உடலில் நோய்கள் உண்டானாலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு என்ன காரணங்கள் இதற்கு காரணம் என பார்க்கலாமா?

எப்படி கண்டறியலாம் ?
இதனை ரத்த பரிசோதனையில் மட்டுமே கண்டறியக் கூடும். பொதுவாக 4000-10500 மைக்ரோலிட்டர் ரத்தத்தில் இருந்தால் அது சாதரணமானது.
அதைத் தாண்டி மிக அதிகமாக 14,000 த்திற்மு மேல் கூடினால் அது வேறு ஏதோ பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் பார்க்கலாம்.

தொற்று :
உடலில் பேக்டீரியா, வைரஸ் ஆகியவை ஊடியிருந்தால் அல்லது அறுவை கிசிக்சையில் உள்ளே இரும்பு பொருட்கள் பொருத்தினால் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.

புகை :
COPD எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயினாலும் ரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும். அதற்கு புகைப்பிடிப்பதும் காரணமாகும்.
உங்கள் நுரையீரலில் புகையினால் உண்டாகும் பாதிப்பினால் எலும்பு மஜ்ஜையில் வெள்ளையணுக்கள் அதிகரித்து ரத்தத்தில் அதிகரிக்கும்.

லுகீமியா :
ரத்தப் புற்று நோயான லுகீமியாவினாலும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.

தனிச்சை நோய் எதிர்ப்பு நோய் :
கிருமிகள்தான் என்றில்லை. தனது உள்ளுறுப்புகளையே வேற்று பொருளாக பாவித்து நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு அந்த இடத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
இது உடலில் உண்டாகும் ஒரு வகை கோளாறு. இதனால் வெள்ளையணுக்கள் இருமடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும்.

மன அழுத்தம் :
மன அழுத்தத்தாலும் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் என்பது தெரியுமா? இதில் நல்ல விஷய்ம் என்னவென்றால் மன அழுத்தம் குறைந்ததும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications











