Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும் ??
கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல் உண்டாகும். நீர் வழிந்து கொண்டேயிருக்கும். காற்று பட்டால் எரியும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும். உடனடியாக வறண்ட கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் அது எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். கண்களை பாதித்து விடும்.

தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது, அல்லது டிவி பார்க்கும்போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்துவிட்டால், இதனால் போதுமான திரவம் கண்களில் சுரக்காமல் போய்விடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.
அது தவிர்த்து, கண்களில் கண்ணாடி அணிவதால், கண்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், அல்லது மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி ஆகியவற்றாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.
அதேபோல் மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் கண்களில் வறட்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றத்திற்கும், கண்களின் வறட்சிக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொற்று வியாதிகள் :
கண்கள் வறண்டு போவதால் எளிதில் தொற்று ஏற்பட்டுவிடும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் சிரமம் உண்டாதல் ஆகியவை உண்டாகும். ஆகவே கண்களில் வறட்சி ஏற்பட்டால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
வறட்சியிலிருந்து பாதுகாக்க :
உங்கள் கண்கள் வறண்டிருந்தால், உடனடியாக நிவர்த்தி செய்துவிடுங்கள். செயற்கை கண்ணீர் சிகிச்சையின் மூலம் கண்களுக்கு ஈரப்பதம் அளிக்கலாம். ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், முட்டை, கேரட், மற்றும் நட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை கண்களில் திரவம் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கண்களில் எண்ணெய் சுரப்பும் தூண்டப்படும். இதனால் கண்களின் எரிச்சல் குறையும்.
புகை தூசு ஆகியவை கண்களில் படாமலிருக்க கண்ணாடி அணிவது நல்லது. வறட்சி குறையாமலிருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் கண்களை பாதிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














