Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும் ??
கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி.
வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல் உண்டாகும். நீர் வழிந்து கொண்டேயிருக்கும். காற்று பட்டால் எரியும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும். உடனடியாக வறண்ட கண்களை மருத்துவரிடம் காண்பிக்காவிட்டால் அது எளிதில் தொற்றுக்களை உண்டாக்கும். கண்களை பாதித்து விடும்.

தொடர்ந்து புத்தகம் படிக்கும்போது, அல்லது டிவி பார்க்கும்போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்துவிட்டால், இதனால் போதுமான திரவம் கண்களில் சுரக்காமல் போய்விடும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும்.
அது தவிர்த்து, கண்களில் கண்ணாடி அணிவதால், கண்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், அல்லது மருந்துகள் உண்டாக்கும் அலர்ஜி ஆகியவற்றாலும் கண்களில் வறட்சி ஏற்படும்.
அதேபோல் மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும் கண்களில் வறட்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றத்திற்கும், கண்களின் வறட்சிக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொற்று வியாதிகள் :
கண்கள் வறண்டு போவதால் எளிதில் தொற்று ஏற்பட்டுவிடும். தொற்றினால் எரிச்சல், கண்களை திறந்து மூடுவதில் சிரமம் உண்டாதல் ஆகியவை உண்டாகும். ஆகவே கண்களில் வறட்சி ஏற்பட்டால் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
வறட்சியிலிருந்து பாதுகாக்க :
உங்கள் கண்கள் வறண்டிருந்தால், உடனடியாக நிவர்த்தி செய்துவிடுங்கள். செயற்கை கண்ணீர் சிகிச்சையின் மூலம் கண்களுக்கு ஈரப்பதம் அளிக்கலாம். ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், முட்டை, கேரட், மற்றும் நட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை கண்களில் திரவம் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் கண்களில் எண்ணெய் சுரப்பும் தூண்டப்படும். இதனால் கண்களின் எரிச்சல் குறையும்.
புகை தூசு ஆகியவை கண்களில் படாமலிருக்க கண்ணாடி அணிவது நல்லது. வறட்சி குறையாமலிருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் கண்களை பாதிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


