Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்களில் இதுவும் ஒன்று !! எது தெரியுமா?
சர்க்கரை வியாதி போலவே, மற்றொரு நோயும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது சிறு நீரக் நோய்தான்.
கடந்த 15 வருடங்களில் மலைக்கத்தக்க வகையில் சிறு நீரக நோய் அதிகரித்து வருகிறது. 100ல் 17 பேருக்கு சிறு நீரக நோய் தாக்குகிறது என கணக்கெடுப்பு கூறுகின்றது.

ஒவ்வொரு கோடி மக்களில் 150- 230 பேர் சிறு நீரக நோயின் இறுதி நிலையில் இருப்பதாகவும், 2,20,000-2,75,000 நோயாளிகள் சிறு நீரக மாற்று சிகிச்சைக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வருடத்திற்கு வருடம் 15 % டயாலிஸிஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் இதில் உள்ளடக்கம் என்பது கவலைகுரிய விஷயம். இதயம் போல், சிறு நீரகத்தின் நோய்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே காரணம் என மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சுதீப் கூறுகிறார்.
காரணம் என்ன?
அதிகமான உடல் எடை, குறைந்த நீர்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது, நீர் சரியாக குடிக்காமல் இருப்பது, அதே போல் மிக முக்கியமான விஷயம் சோடியம் கலந்த உணவுகளை அதிகம் உண்பது சிறு நீரகத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கே 1-5- 2.3 கிராம் அளவே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் க்டைகளில் சாப்பிடும் விகிதம் இது போல் இரண்டு மடங்கு அமைகிறது.
தடுப்பது எவ்வாறு ?
இந்திய உடல் நலத்துறை அடுத்த 2 வருடத்திற்குள் மாவட்ட அளவில் 2000 டயாலிஸிஸ் சென்டர் அமைக்கப்படும் என கூறியுள்ளது.
இதனை தடுக்க போதிய விழிப்புணர்வு மக்களிடம் உருவாக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க சொல்லித் தர வேண்டும். வாழ்க்கை முறை என்பது நேரத்திற்கு உண்பது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளையும், பழங்களையும் சாப்பிட சொல்வது, நிறைய நீர் அருந்தச் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் 300- 400 டயாலிஸிஸ் சென்டர்கள் தற்போது உள்ளன. 60 % நோயாளிகள் சிறுநீரக நோய் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கின்றனர். இந்தியாவின் பெரும் நகரங்களில் சிறு நீரக நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் சுமார் 1500 சிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். வெறும் 4 % நோயாளிகளுக்கே மாற்று சிறு நீரகம் கிடைக்கின்றன. இதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சிறு நீரகம் அதி முக்கியமான வேலையை செய்கிறது. மற்ற உறுப்புகளைக் காட்டிலும் அதிக பாரங்களை தாங்குவது சிறு நீரகம்தான். அதனால்தான் இரு சிறு நீரகங்கள் இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. ஆகவே அதனை பாதுகாப்பது நம் கையில் உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



