Just In
- 3 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 5 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 8 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்களில் இதுவும் ஒன்று !! எது தெரியுமா?
சர்க்கரை வியாதி போலவே, மற்றொரு நோயும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது சிறு நீரக் நோய்தான்.
கடந்த 15 வருடங்களில் மலைக்கத்தக்க வகையில் சிறு நீரக நோய் அதிகரித்து வருகிறது. 100ல் 17 பேருக்கு சிறு நீரக நோய் தாக்குகிறது என கணக்கெடுப்பு கூறுகின்றது.
ஒவ்வொரு கோடி மக்களில் 150- 230 பேர் சிறு நீரக நோயின் இறுதி நிலையில் இருப்பதாகவும், 2,20,000-2,75,000 நோயாளிகள் சிறு நீரக மாற்று சிகிச்சைக்கு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வருடத்திற்கு வருடம் 15 % டயாலிஸிஸ் செய்துவருவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளும் இதில் உள்ளடக்கம் என்பது கவலைகுரிய விஷயம். இதயம் போல், சிறு நீரகத்தின் நோய்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே காரணம் என மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் சுதீப் கூறுகிறார்.
காரணம் என்ன?
அதிகமான உடல் எடை, குறைந்த நீர்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது, நீர் சரியாக குடிக்காமல் இருப்பது, அதே போல் மிக முக்கியமான விஷயம் சோடியம் கலந்த உணவுகளை அதிகம் உண்பது சிறு நீரகத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கே 1-5- 2.3 கிராம் அளவே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் க்டைகளில் சாப்பிடும் விகிதம் இது போல் இரண்டு மடங்கு அமைகிறது.
தடுப்பது எவ்வாறு ?
இந்திய உடல் நலத்துறை அடுத்த 2 வருடத்திற்குள் மாவட்ட அளவில் 2000 டயாலிஸிஸ் சென்டர் அமைக்கப்படும் என கூறியுள்ளது.
இதனை தடுக்க போதிய விழிப்புணர்வு மக்களிடம் உருவாக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க சொல்லித் தர வேண்டும். வாழ்க்கை முறை என்பது நேரத்திற்கு உண்பது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளையும், பழங்களையும் சாப்பிட சொல்வது, நிறைய நீர் அருந்தச் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் 300- 400 டயாலிஸிஸ் சென்டர்கள் தற்போது உள்ளன. 60 % நோயாளிகள் சிறுநீரக நோய் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கின்றனர். இந்தியாவின் பெரும் நகரங்களில் சிறு நீரக நோய்க்கான சிறப்பு மருத்துவர்கள் சுமார் 1500 சிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். வெறும் 4 % நோயாளிகளுக்கே மாற்று சிறு நீரகம் கிடைக்கின்றன. இதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சிறு நீரகம் அதி முக்கியமான வேலையை செய்கிறது. மற்ற உறுப்புகளைக் காட்டிலும் அதிக பாரங்களை தாங்குவது சிறு நீரகம்தான். அதனால்தான் இரு சிறு நீரகங்கள் இயற்கை நமக்கு கொடுத்துள்ளது. ஆகவே அதனை பாதுகாப்பது நம் கையில் உள்ளது.