Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
அடிக்கடி வரும் தலைவலியை நொடியில் போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள்!
இங்கு அடிக்கடி வரும் தலைவலியை நொடியில் போக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையால் பலரும் தலைவலியால் அடிக்கடி அவஸ்தைப்படுகின்றனர். இந்த தலைவலியில் இருந்து விடுபட நிறைய பேர் வலிநிவாரணி மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தலைவலிக்கு இப்படி அடிக்கடி மாத்திரைகளை எடுத்தால், அது நாளடைவில் உடலினுள் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

ஆகவே தலைவலி வந்தால், உடனே மாத்திரை போடுவதைத் தவிர்த்து, இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி நீங்குவதோடு, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். சரி, இப்போது தலைவலிக்கான சில பாட்டி வைத்தியங்களைக் காண்போம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி சிறிதை அரைத்து நீரில் கலந்து, தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு
கிராம்பை பேஸ்ட் செய்து சூடேற்றி, அதனை நெற்றியில் தடவினால், தலைவலி உடனே குணமாகும்.

சீரகம்
35 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை தலையில் தடவி ஊற வைத்து அலச, தலைவலி வருவதைத் தடுக்கலாம்.

குங்குமப்பூ
குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ தலைவலி விரைவில் நீங்கும்.

வெற்றிலை
வெற்றிலையை லேசாக சூடேற்றி, நெற்றியில் வைத்தால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பட்டை
சிறிது பட்டையை பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வலியுள்ள தலைப்பகுதியில் தடவினால், தலைவலி உடனே போய்விடும்.

இஞ்சி
இஞ்சியும் தலைவலியைப் போக்கும். அதற்கு சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் கலந்து குடிக்க, நாள்பட்ட தலைவலியைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications