Just In
- 15 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 7 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
Don't Miss
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கும் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏதேனும் சிறு வலியாக இருந்தாலும் கூட உடனே அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம்.
பெரிதோ, சிறிதோ அது எந்த ஒரு உடல்நலக் கோளாறாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டாம், முக்கியமாக வலி நிவாரண மாத்திரைகள்.
ஏனெனில், வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, வயிற்றுப் புண், கருச்சிதைவு, மன தளர்ச்சி மற்றும் இரத்தம் மெலிந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன....
கல்லீரல் பாதிப்பு
பொதுவாகவே எல்லா மருந்துகளிலும் ஆல்கஹால் தன்மை சிறிதளவு இருக்கும். வலி நிவாரண மாத்திரைகளில் கொஞ்சம் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அதிலும் அதிக டோஸ் உள்ள வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும் போது நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
வயிற்று புண்
மருந்து மாத்திரைகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு சாதாரணமாகவே வயிற்றுப் புண் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும், வலி நிவாரண மாத்திரைகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு வயிற்று புண் பிரச்சனைகள் விரைவாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகம் செயலிழப்பு
நீங்கள் அதிகமாக வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணத்தால், சிறுநீரகங்கள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
கருச்சிதைவு
வலி நிவாரண மாத்திரைகளில் அதிகம் சாப்பிடுவதனால், கருச்சிதைவு ஏற்படும். இது மட்டுமின்றி, கருத்தரிக்க விரும்புவோரும் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், அது கருத்தரிக்கும் சதவீதத்தை குறைத்து விடும்.
மன தளர்ச்சி
அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதனால், உங்கள் செயல்திறனில் குறைபாடு ஏற்படும். இதனால், உங்களுக்கு மன சோர்வும், தளர்வும் ஏற்படும். எனவே, எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.
இரத்தம் மெலிதல்
அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதனால், இரத்தத்தின் அடர்த்திக் குறைந்துவிடும். இது உங்களுக்கு பல உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.