Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
நைட் ஷிபிட் பார்க்கும் போது காபி வேண்டாம் - ஜப்பான் நபர் மரணம்!
காலை எழுந்ததும் காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, இடையே, 11 மணிக்கு ஒருமுறை, உணவருந்திய பிறகு ஒருமுறை, மாலை ஒருமுறை, வீடு திரும்பியதும் ஒருமுறை என காபியின் ருசி நாவை விட்டு விலகாதவண்ணம் இருக்கும் அளவு காபி குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஏராளம்.
ஆனால், இந்த பழக்கம் இப்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதிகப்படியாக காபி பருகுவதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கடைசியில் ஒரு நபர் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தி.
இதனால், இனிமேல் அதிகளவு காபியை பருக வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது....

காபியால் ஏற்பட்ட மரணம்
ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கியூஷூவில் (Kyushu) வாழ்ந்து வந்த நபர் ஒருவர், இரவில் அதிகளவு காபி பருகி வந்தாதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிசோதனை அறிக்கை
இவரை ஃப்யூகூவோகா பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல் (Forensic) நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். அதில் இவரது வயிற்றில் நிறைய காஃபினை பில்ஸ் இருந்ததாக கூறியுள்ளனர். இது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்றும் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

அயராது வேலை
ஒரு ஷிபிட் முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அடுத்த ஷிபிட் வேலைக்கு செல்லும் பழக்கம் கொண்டிருந்தாராம் அவர். சில நாட்களில் இவர் 24 மணிநேரமும் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. உறக்கம் வராமல் இருக்க நிறைய காஃபினை உபயோகித்துள்ளார்.

வாந்தி, மயக்கம்
அதிகப்படியாக காபி பருகியதால் இவருக்கு வாந்தி, நச்சுத்தன்மை பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டுள்ளன. இவர் இறந்த அன்று, மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன்னர் கூட இவர் வாந்தி எடுத்து மயக்கநிலையில் தான் இருந்தார் என்று ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் அதிர்ச்சி
இந்த மரணத்தை கண்டு ஜப்பான் அதிர்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் இதுப் போன்ற மரணம் இது தான் முதல் முறை என ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படுகிறது
சமீபக் காலத்தில் அமெரிக்காவில் இது போன்ற மரணங்கள் நிறைய நடப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 13 பேருக்கும் மேல் ஒரே மாதிரியான எனர்ஜி பானம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து அமெரிக்காவின் எப்.டி.ஏ விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications