Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நைட் ஷிபிட் பார்க்கும் போது காபி வேண்டாம் - ஜப்பான் நபர் மரணம்!
காலை எழுந்ததும் காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, இடையே, 11 மணிக்கு ஒருமுறை, உணவருந்திய பிறகு ஒருமுறை, மாலை ஒருமுறை, வீடு திரும்பியதும் ஒருமுறை என காபியின் ருசி நாவை விட்டு விலகாதவண்ணம் இருக்கும் அளவு காபி குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஏராளம்.
ஆனால், இந்த பழக்கம் இப்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதிகப்படியாக காபி பருகுவதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கடைசியில் ஒரு நபர் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தி.
இதனால், இனிமேல் அதிகளவு காபியை பருக வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது....

காபியால் ஏற்பட்ட மரணம்
ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கியூஷூவில் (Kyushu) வாழ்ந்து வந்த நபர் ஒருவர், இரவில் அதிகளவு காபி பருகி வந்தாதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிசோதனை அறிக்கை
இவரை ஃப்யூகூவோகா பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல் (Forensic) நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். அதில் இவரது வயிற்றில் நிறைய காஃபினை பில்ஸ் இருந்ததாக கூறியுள்ளனர். இது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்றும் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

அயராது வேலை
ஒரு ஷிபிட் முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அடுத்த ஷிபிட் வேலைக்கு செல்லும் பழக்கம் கொண்டிருந்தாராம் அவர். சில நாட்களில் இவர் 24 மணிநேரமும் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. உறக்கம் வராமல் இருக்க நிறைய காஃபினை உபயோகித்துள்ளார்.

வாந்தி, மயக்கம்
அதிகப்படியாக காபி பருகியதால் இவருக்கு வாந்தி, நச்சுத்தன்மை பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டுள்ளன. இவர் இறந்த அன்று, மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன்னர் கூட இவர் வாந்தி எடுத்து மயக்கநிலையில் தான் இருந்தார் என்று ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் அதிர்ச்சி
இந்த மரணத்தை கண்டு ஜப்பான் அதிர்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் இதுப் போன்ற மரணம் இது தான் முதல் முறை என ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படுகிறது
சமீபக் காலத்தில் அமெரிக்காவில் இது போன்ற மரணங்கள் நிறைய நடப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 13 பேருக்கும் மேல் ஒரே மாதிரியான எனர்ஜி பானம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து அமெரிக்காவின் எப்.டி.ஏ விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications