Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி -
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு 234 தொகுதிகள் இருப்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் அறிவாற்றலை அழிக்கும் விஷயங்கள்!!!
ஒவ்வொருவருக்கும் தனது புத்திசாலித்தனத்தை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் தங்களது புத்திக்கூர்மையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். சமீபத்தில் நிபுணர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் படி, அறிவாற்றலை அழிக்கும் சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளனர்.
அந்த விஷயங்கள் அனைத்துமே சாதாரணமாக நாம் அனைவரும் செய்பவை மற்றும் நாம் அனுபவிப்பவை. இங்கு அறிவாற்றலை அழிக்கும் அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!

அளவுக்கு அதிகமான சர்க்கரை
சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், இடுப்பளவு மட்டும் அதிகரிக்காது, மூளை செல்களையும் அவை பாதிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் 6 வாரங்களாக தொடர்ந்து சர்க்கரை சாப்பிட்டு வந்தவரை சோதித்ததில், அவரது மூளையின் செயல்பாடு குறைந்து, அவரின் கற்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே சர்க்கரை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது
நீங்கள் சிகரெட் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் புகைப்பிடிப்போரின் அருகில் எப்போதும் நின்றவாறே இருந்தால், அது அறிவுத்திறனை பாதிக்கும். அதனால் தான் குழந்தைகள் முன்பு புகைப்பிடிக்க வேண்டாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் சிகரெட் புகையை சுவாசிப்பதால், உடலில் ஆக்ஸிஜனுக்கு பதிலாக கார்பன் மோனாக்ஸைடு அதிகரித்து, அவை மூளை செல்களை பாதித்து, அறிவுத்திறனை அழிக்கும்.

பல வேலைகளில் ஈடுபடுவது
ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டு வந்தால், பலரும் தங்களை மிகுந்த திறமை வாய்ந்தவராக கருகின்றனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதால், எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போவதோடு, அறிவுத்திறனை குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன்
உடல் பருமனால் தற்போது பலரும் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் ஏற்பட்டால், ஞாபக மறதி மற்றும் புலனுணர்வு குறைபாடு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மன அழுத்தம்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மூளையில் உள்ள நியூரான்களின் தொடர்பை குறைக்கும். அதுவே அதிகமானால், மூளையில் செயல்பாடு மோசமாகி, நாளடைவில் ஞாபக மறதியை ஏற்படுத்திவிடும். ஆகவே மன அழுத்தம் ஏற்பட்டால், அதிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஈடுபடுங்கள்.



Click it and Unblock the Notifications











