Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
அஜீரணம் மற்றும் வாயுக் கோளாறா? இஞ்சி தான் எப்பவுமே பெஸ்ட்...
உங்களுக்கு அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்படுகிறதா? வயிற்றில் வாயுத் தொந்தரவாலும் அவதிப்படுகிறீர்களா? நம் வீட்டிலேயே கிடைக்கும் இஞ்சி மட்டுமே இதற்கு சரியான தீர்வாகும்.
அஜீரணக் கோளாறைச் சரிசெய்வதோடு மட்டுமல்லாமல், உணவில் உள்ள புரோட்டீன்களையும் இஞ்சி சரியான விகிதத்தில் சமப்படுத்துகிறது. மேலும் இது நம் வயிற்றில் மியூக்கஸ் சுரப்பை உறுதிப்படுத்தி, அல்சர் நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.
இவை தவிர, வயிற்றில் ஏற்படும் வாயுத் தொந்தரவைப் போக்குவதற்கு இஞ்சியில் உள்ள கார்மினேட்டிவ் தன்மை உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-எமெட்டிக் பண்புகள், எரிச்சல், வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளன. இவை எல்லாவற்றையும் விட, பலவிதமான அலர்ஜிகளைப் போக்குவதிலும் இஞ்சி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

இஞ்சியை அஜீரணக் கோளாற்றுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? இதோ சில டிப்ஸ்:
இஞ்சி ஜூஸ்
இஞ்சியை நன்றாகக் கழுவி, அதன் தோலை உரித்த பின்னர், இஞ்சி ஜூஸ் தயாரித்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு நாளுக்கு ஒருமுறை குடித்து வந்தாலே போதும். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
பல்லாலேயே கடித்து...
இஞ்சியைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். அதில் ஒரு துண்டை கடவாய்ப் பல்லால் கடித்து, வரும் ஜூஸை அப்படியே விழுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் தள்ளவும். இப்படியே ஒவ்வொரு துண்டாகக் கடித்து சாறு குடித்தால் விரைவில் அஜீரணத்துக்கு விடுதலை கிடைக்கும்.
வாந்திக்கும்...
ஒரு இஞ்சித் துண்டில் சிறிது உப்பைத் தூவி, கடவாய்ப் பல்லில் நன்றாகக் கடித்து, அதில் வரும் சாற்றைக் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாவது மட்டுமில்லை; வாந்தி வருவதும் நிற்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











