Latest Updates
-
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
'எபோலா' என்ற எமனிடம் இருந்து தப்பிக்க 8 வழிகள்!!!
மேற்கு ஆப்ரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த எபோலோ இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது என்று சொல்கிறது அண்மையில் கிடைத்த ஒரு தகவல். எபோலோ போன்ற மரணத்தை ஏற்படுத்தும் வைரஸ்களை, கவனிக்காமல் விட்டால் அது ஆரோக்கியமான மனிதர்களை தாக்கி ஈ.வி.டி (Ebola Virus Disease) எனப்படும் நோயை உண்டாக்கி விடும்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல்!
இந்த நோய் வந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட உடனேயே அதைத் தவிர்க்கவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் செய்வது தான் தொற்று பரவாமல் தடுக்கும் வழியாகும். இந்த கட்டுரையின் மூலம் எபோலாவைத் தடுக்கும் சில பாதுகாப்பு டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

எபோலாவைத் தெரிந்து கொள்ளுங்கள்
எபோலாவின் அறிகுறிகள், பரவும் வழிமுறைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கையாகும். குறிப்பாக, மேற்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து வருபவர்களும் தான் இந்த தகவல்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுகாதார சூழலை பராமரித்தல்
எபோலாவைத் தவிர்ப்பதற்கு அடிப்படை சுகாதாரத்தைப் பேண வேண்டியது அவசியமாகும். இந்த வைரஸ் உடலுக்குள் எப்படி நுழைகிறது என்பது இன்னமும் கண்டறியப்படாவிட்டாலும், தோலும், கண்களும் வழிகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், உணவும், நீராதாரமும் கூட வழிகளாக இருக்கலாம். எனவே, சாப்பிடும் முன்னர் கைகளை கழுவுதல், தரைகளை கிருமிநீக்கம் செய்து வைத்தல் மற்றும் வாயை மூடிக் கொள்ளுதல் போன்ற எளிய செயல்கள் போதும் எபோலாவை வர விடாமல் தவிர்க்க. அதுவும் உங்களுடைய சுற்றுப்புறத்தில் எபோலாவின் தாக்கம் இருக்கும் போது மேற்கண்ட சுகாதார செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இரத்தம் மற்றும் உடல் திரவங்கள் பரிமாற்றம்
எபோலா வைரஸானது, பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உயிரணு, எச்சில், வியர்வை, சிறுநீர் மலம் என அனைத்து விதமான உடல் திரவங்களின் மூலமாகவும் பரவக்கூடும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஆகியவர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள், ஊசிகள் தொடவும் மற்றும் முதலுதவி செய்யவும் கூடும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

காயங்களுக்கு சிகிச்சையளித்தல்
திறந்த காயங்கள் மற்றும் வெட்டுகளின் மூலம் வைரஸ் உடலுக்குள் செல்ல ஒரு வாய்ப்பு உருவாகி விடுகிறது. எனவே, சிறியளவிலான வெட்டுக்காயங்கள் மற்றும் இரத்தம் சிந்தும் காயங்களை சிகிச்சையளித்த பின்னர் மூடி வைக்க வேண்டும்.

கூட்டமான இடங்களை தவிர்க்கவும்
வைரஸை பரிமாற்றம் செய்வதற்கு நேரடித் தொடர்பு தான் எளிய வழியாகும். எனவே, நோய்வாய்ப்பட்டவர்களை ஆரோக்கியமான நபர்களை தனிமைப்படுத்தி வைப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தவிர்த்திட முடியும்.

பாதுகாப்பு சாதனங்கள்
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்தவ அலுவலர்கள் ஆகிய அனைவரும், கையுறைகளையும், சிறப்பு முகமூடிகளையும் மற்றும் வைரஸிடமிருந்து பாதுகாக்கக் கூடிய உடலுறைகளையும் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும், நோய் பாதிப்பு உள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வசித்து வரும் ஆரோக்கியமான சாதாரண நபர்களும் கூட கையுறைகள் மற்றும் முகமூடிகளை பயன்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

வேகாத இறைச்சி வேண்டாம்
எபோலா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது என நம்பப்படுகிறது. வேளவ்வால்களில் இருந்து தான் இந்த வைரஸ் உண்மையிலேயே பரவியது என்று சொல்லப்பட்டாலும், அது மற்ற மிருகங்களிலும் பரவியுள்ளது. நிலைமை எப்படியிருந்தாலும், சரியாக வேகாத இறைச்சியை சாப்பிடாமல் இருப்பது நலம்

தேவையற்ற பயணம் வேண்டாம்
டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள ரோக்லாண்டு குழும மருத்துவமனையில், மருத்துவத் துறையின் தலைவராக உள்ள டாக்டர். இரத்தன் குமார் வைஸ் என்பவரின் கருத்துப்படி, அவசியமில்லா வெளியூர் பயணங்களை தவிர்த்திடுவது எபோலாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அதுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications