Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வலி நீக்கும் மூலிகைத் தேநீர்

பச்சைச் தேயிலை தேநீர்
மருத்துவ குணம் நிறைந்த பச்சைச் தேயிலை ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இது பல உடல் நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது. உடல் எடையை கட்டுப்படுத்தும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். தீராத தலைவலியை போக்கும்.
துளசி தேநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். தீராத தலைவலியை போக்கும்.
வல்லாரை தேநீர்
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்.
சீரகத் தேநீர்
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் தேநீர் போல பருகி வருவது நல்லது. இது இதயத்திற்கு இதமானது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், வாய்ப்புண் போன்றவற்றை குணமாக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். தலைவலியை போக்கும்.
லவங்கப்பட்டை தேநீர்
வாசனைப் பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டையில் தயாரிக்கப்படும் மூலிகைத் தேநீர் தலைவலியைப் போக்கும். இது வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.
இஞ்சி தேநீர்
இஞ்சி சிறந்த மூலிகையாகும். இதனை நன்றாக இடித்து தண்ணீர் ஊற்றி தேநீர் தயாரிக்கலாம். தலைவலி, இருமல் போக்கும் எளிதான மூலிகைத் தேநீர் இது. அநேக வீடுகளில் இது தயாரிக்கப்படுகிறது.
சாமந்திப் பூக்கள் தேநீர்
சாமந்திப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத்தேநீர் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், அதிகம் உள்ளது. இது தலைவலியை நீக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications