Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை - உண்மை காரணம் என்ன?
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆவது படிக்கும் அவரது மகள் ஏற்கனவே மிகுந்த மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு, அந்த மன அழுத்தத்திற்கு ஏற்கனவே மாத்திரைகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவரது தந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து, வீட்டில் வேலை செய்வோரின் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று நிறைய பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் உள்ளனர். இப்படி மன அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது மனநிலையை மோசமாக பாதித்து, பல மோசமான எண்ணங்களை மனதில் வரவழைத்து, உயிரையே பறித்துவிடும். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
அதிக சோர்வு
ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவரது இரத்தத்தில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக இதயத் துடிப்பு மற்றும் சுவாசிக்கும் செயல்முறையானது துரிதப்படுத்தப்படுகிறது. இப்படி தொடர்ந்து இரத்தத்தில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இந்தால், அது மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எனவே நீங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் மிகுந்த உடல் சோர்வு மன அழுத்தத்திற்கு மட்டுமின்றி, வேறு பல பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பற்களை அரைப்பது
பற்களை அரைப்பதும் மன அழுத்தத்தின் அறிகுறியாகும். இது தூக்கமின்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. யார் ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளாரோ, அவரது ஆழ்மனம் நிம்மதியின்றி ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கும். இதன் விளைவாக நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல், ஒரு கட்டத்தில் பற்களை அரைக்கவும் நேரிடும். பற்களை அரைப்பது பல் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, மிகுந்த தாடை வலியையும் உண்டாக்கும். எனவே நீங்கள் பற்களை அரைத்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
தலைவலி
தலைவலியும், மன அழுத்தத்தின் அறிகுறிகளுள் ஒன்றாகும். பெரும்பாலும் இம்மாதிரியான தலைவலி அதிகமாக டென்சனானால் வரக்கூடும். அதுவும் இந்த தலைவலி சில மணிநேரங்கள் நீடித்திருக்கும். அப்போது வலியானது தலையில் இரண்டு புறங்களில் மட்டுமின்றி, அப்படியே அந்த வலி கழுத்து மற்றும் தோள்பட்டைகளிலும் பரவும். இப்படியான வலியை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார் என்று அர்த்தம்.
எரிச்சலுணர்வு
மன அழுத்தமானது ஒருவரது மனநிலையை பாதித்து, மனதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அதாவது, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, நரம்பு மண்டலமானது மிகவும் வேகமாக பதிலளிக்கக்கூடியதாகவும், உணர்ச்சி ஏற்பிகள்அதிக உணர்திறன் கொண்டவையாகவும் இருக்கும். இந்நிலையில் சிறு விஷயங்களுக்கு கூட அதிக எரிச்சலடையக்கூடும்.
அழுகை
சிலர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது அதிகமாக அழக்கூடும். கண்ணீர் என்பது மன அழுத்தத்தின் விளைவு மட்டுமல்ல, மன அழுத்தத்தின் போது ஒருவரை ஆதரிக்கும் செயல்பாட்டை கொண்டுள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒருவர் அழுதால், அந்த கண்ணீரின் வழியாக கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்பட்டு, ஒருவித நல்ல உணர்வு மனதில் ஏற்படும்.
பாலியல் ஆசை குறைவு
ஒருவரது பாலியல் ஆசை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், உடலில் ஹார்மோன் சமநிலையுடனும், நரம்புகள் சரியாகவும் இருக்க வேண்டும். ஆனால் மன அழுத்தத்துடன் இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் அதிகம் வெளியிடப்பட்டு, அது பாலியல் ஆசையில் இடையூறை ஏற்படுத்தி, பாலியல் நாட்டத்தைக் குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications