Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
வீட்டில் எப்படியோ அப்படிதான் வெளியேயும்- உங்கள் பிள்ளைகள் !!
உங்களுக்கு அலுவலகத்தில் எப்போதும் ஏதாவது பிரச்சனைகள் தொடர்ந்தவாறு இருக்கிறதா? இதற்கு நீங்கள் வளர்ந்த விதமும் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனித உறவை மேம்படுத்தும் விதமாக வெளிவரும் ஹியூமன் ரிலேஷன் என்ற இதழில் இதைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது.
ஒரு அலவலகத்தில் மேனேஜருக்கும் , ஊழியருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றியும், வீட்டில் வளர்ந்த விதமும், அலுவலகத்தில் நடந்து கொள்ளும் விதமும் ஆராய்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

ஒரு மனிதன் வளர்ந்து தவறுகள் செய்கிறானென்றால், அவனைப் பெற்ற அம்மாவைத்தான் குறை கூறுவோம். காரணம் அவள்தான் அவனுக்கு மிக நெருக்கமாக ஆரம்பித்திலிருந்து இருந்திருப்பாள். அவளைத்தான் முன்னுதாரணமாக வைத்திருப்பான்.
எது எப்படி இருந்தாலும் பெற்றோர் குழந்தைகளிடம் நடக்கும் விதம்தான், பிற்காலத்தில் அலுவலகத்திலும் சமூகத்திலும் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது என்று ஆய்வு நடத்திய அல்பாமா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பீட்டர் ஹார்ம்ஸ் கூறுகிறார்.
குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிடும்போது, பெற்றோரின் உதவிக்கு காத்திருக்கும் அல்லது, அந்த சூழ்நிலையை பெரிதாக்கி, எல்லாருடைய கவனத்தையும் தம் பக்கம் இழுக்கும்.
அந்த சமயங்களில் இந்த சூழ் நிலையை எப்படி கையாளவது என்று அந்த குழந்தைக்கு விளக்கி புரியவைப்பது ஒவ்வொரு பெற்றோரிந் கடமை. அந்த குழந்தைக்கு தன்னைத் தானே சரிபடுத்திக் கொள்ள விடாமல் ஒவ்வொரு சமயத்திலும் உதவி செய்தால், அவர்களின் தனித்தன்மை மற்றும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்க வைப்பது போலாகிவிடும்.
இது அந்த குழந்தை வளர்ந்தும் தொடர்ந்தால், அலுவலகத்திலும் சமூகத்திலும் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமல் , பிறரின் உதவியை எதிர்பார்த்தபடியே இருக்கும்.
இப்படி பதட்டமான சரிவர கையாளத் தெரியாத ஊழியருக்கு, நல்ல ஆதரவான மேலதிகாரி கிடைத்தால், அவரை அரவணைத்துச் செல்லும் வாய்புண்டு. ஆனால் ஆதரவு தராத , கண்டிப்பாக நடந்து கொள்ளும் மேலதிகாரி கிடைத்தால், அந்த ஊழியர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பணியில் சுமாரான செயல்பாடுகள்தான் இருக்கும். இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிம்மதியில்லாத சூழ் நிலைஉருவாகும் வாய்ப்புள்ளது.. இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கூடவே இருந்து சொல்லித் தந்து நடத்திச் செல்லாதீர்கள். வழி காட்டுங்கள். அவர்கள் நடக்கட்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














