Latest Updates
-
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
அர்த்ரைடிஸ் வராமல் காக்க இந்த 5 யோகாசனங்கள் செஞ்சு பாருங்க !!
மூட்டு வலி இன்று 20 களின் இறுதியிலேயே கூட வருகிறது. இதற்கு மரபணு, ஊட்டச்சத்தில்லாத உணவுகள்,உடலுக்கு போதிய பயிற்சிகள் இல்லாமல் இருப்பது எனபல காரணங்கள் உள்ளன. யோகா செய்வதால் ஆர்த்ரைடிஸ் வராமல் காக்கலாம்
மூட்டு வலி எலும்புகள் பலவீனமடைவதாலும் எலும்புகள் இணையும் இடத்தில் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படுவதாலும் உண்டாகும்.
ஒவ்வொரு வருடமும் 30-50 வயதுகுட்பட்ட சுமார் 15 கோடி மக்கள் ஆர்த்ரைடிஸினால் பாதிக்கப்படுகிறார்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது.

மூட்டு இணைப்புகளில் வீக்கம், வலி, ரத்த சோகை, காய்ச்சல், இவைகளெல்லாம் ருமடாய்டு ஆர்த்ரைடிஸின் அறிகுறிகளாகும்.
இதற்கு தகுந்த மாத்திரைகளை விட நாம் செய்யும் பயிற்சிகாள் எலும்பு மற்றும் இணைப்பு திசுக்களை வலுப்படுத்தமுடியும். அப்படியான பயிற்சிகள் யோகாவில் இருக்கின்றன.
ஆர்த்ரைடிஸை வராமல் காக்கும் யோகாசனங்களை இப்போது பார்க்கலாம். யோகாவின் பெயர்களையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு தகுந்த பயிற்சியாளரின் உதவியுடன் செய்யும்போது முழுப்பலனும் கிடைக்கும்.

சூரிய நமஸ்காரம் :
இது மிகச் சிறந்த யோகா. அதிகாலை செய்வது சிறந்த முறையில் பலனளிக்கும். இது தலையை மேல் நோக்கி பார்த்து , தரையில் கைகளை பதித்து உடலை வளைத்து செய்வதால் எலும்புகள் பலப்படுகின்றன.
மூச்சுப் பயிற்சியும் இதில் இருப்பதால் நுரையீரல் சுத்தமாகிறது.

சவாசனா :
சவாசனா என்பது உடலை தளர்வாக படுக்க வைத்து மூச்சை மெதுவாக விடுவதாகும். இதனை செய்யும் போது மனம் அமைதி பெறுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஆஞ்சி நேயாசனம் அல்லது பிறை ஆசனம் :
இடது காலை அழுத்தமாக தரையில் பதிந்து வலது காலை அகற்றி வளைத்து உடலை வலது பக்கம் திருப்பி நமஸ்காரம் செய்வதுபோல் கைகளை குவித்து செய்யப்படுவதாகும் இந்த ஆசனம்.
இதுபோல் இடது காலையும் வளைத்து செய்ப்படுகிறது. மூட்டு வலியை குணமாக்கும்.

சேது பந்தாசனம் :
இந்த ஆசனத்தில் நேராக படுத்து கால்களை மடக்கி பாதத்தை ஊன்றியவாறு உடலை மட்டும் பாலம் போல் தூக்கி, தலை மற்றும் பாதம் தரையிலிருக்கும்படியான நிலையில் செய்யப்படுகிறது.

விருக்ஷாசனா :
மரம் போன்று கீழே குறுக்கி மேலே விரிந்த நிலையில் செய்யப்படுவதாகும். ஒற்றை கால் நின்று இன்னொருகாலை தொடையில் பதித்து, கைகளை மேலே வணக்கம் செய்வது போல் அமைத்து நிற்பது.



Click it and Unblock the Notifications