Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
அர்த்ரைடிஸ் வராமல் காக்க இந்த 5 யோகாசனங்கள் செஞ்சு பாருங்க !!
மூட்டு வலி இன்று 20 களின் இறுதியிலேயே கூட வருகிறது. இதற்கு மரபணு, ஊட்டச்சத்தில்லாத உணவுகள்,உடலுக்கு போதிய பயிற்சிகள் இல்லாமல் இருப்பது எனபல காரணங்கள் உள்ளன. யோகா செய்வதால் ஆர்த்ரைடிஸ் வராமல் காக்கலாம்
மூட்டு வலி எலும்புகள் பலவீனமடைவதாலும் எலும்புகள் இணையும் இடத்தில் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படுவதாலும் உண்டாகும்.
ஒவ்வொரு வருடமும் 30-50 வயதுகுட்பட்ட சுமார் 15 கோடி மக்கள் ஆர்த்ரைடிஸினால் பாதிக்கப்படுகிறார்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது.

மூட்டு இணைப்புகளில் வீக்கம், வலி, ரத்த சோகை, காய்ச்சல், இவைகளெல்லாம் ருமடாய்டு ஆர்த்ரைடிஸின் அறிகுறிகளாகும்.
இதற்கு தகுந்த மாத்திரைகளை விட நாம் செய்யும் பயிற்சிகாள் எலும்பு மற்றும் இணைப்பு திசுக்களை வலுப்படுத்தமுடியும். அப்படியான பயிற்சிகள் யோகாவில் இருக்கின்றன.
ஆர்த்ரைடிஸை வராமல் காக்கும் யோகாசனங்களை இப்போது பார்க்கலாம். யோகாவின் பெயர்களையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு தகுந்த பயிற்சியாளரின் உதவியுடன் செய்யும்போது முழுப்பலனும் கிடைக்கும்.

சூரிய நமஸ்காரம் :
இது மிகச் சிறந்த யோகா. அதிகாலை செய்வது சிறந்த முறையில் பலனளிக்கும். இது தலையை மேல் நோக்கி பார்த்து , தரையில் கைகளை பதித்து உடலை வளைத்து செய்வதால் எலும்புகள் பலப்படுகின்றன.
மூச்சுப் பயிற்சியும் இதில் இருப்பதால் நுரையீரல் சுத்தமாகிறது.

சவாசனா :
சவாசனா என்பது உடலை தளர்வாக படுக்க வைத்து மூச்சை மெதுவாக விடுவதாகும். இதனை செய்யும் போது மனம் அமைதி பெறுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஆஞ்சி நேயாசனம் அல்லது பிறை ஆசனம் :
இடது காலை அழுத்தமாக தரையில் பதிந்து வலது காலை அகற்றி வளைத்து உடலை வலது பக்கம் திருப்பி நமஸ்காரம் செய்வதுபோல் கைகளை குவித்து செய்யப்படுவதாகும் இந்த ஆசனம்.
இதுபோல் இடது காலையும் வளைத்து செய்ப்படுகிறது. மூட்டு வலியை குணமாக்கும்.

சேது பந்தாசனம் :
இந்த ஆசனத்தில் நேராக படுத்து கால்களை மடக்கி பாதத்தை ஊன்றியவாறு உடலை மட்டும் பாலம் போல் தூக்கி, தலை மற்றும் பாதம் தரையிலிருக்கும்படியான நிலையில் செய்யப்படுகிறது.

விருக்ஷாசனா :
மரம் போன்று கீழே குறுக்கி மேலே விரிந்த நிலையில் செய்யப்படுவதாகும். ஒற்றை கால் நின்று இன்னொருகாலை தொடையில் பதித்து, கைகளை மேலே வணக்கம் செய்வது போல் அமைத்து நிற்பது.



Click it and Unblock the Notifications