Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சிறுநீர் நோய்களை நீக்கும் கூகைக் கிழங்கு!
மண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளின் மருத்துவ குணங்கள் மகத்துவம் மிக்கவை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத கூகைக்கிழங்கு வயிறு தொடர்புடைய நோய்களை நீக்கும் தன்மை கொண்டது. கூகைக் கிழங்கு என்ற பெயரை விட அர்ரூட் மாவு என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமானது. இதற்கு அரரூட் கிழங்கு, மாக்கிழங்கு, கூகைக் கிழங்கு என்ற பெரும் உண்டு.
மருந்தாக பயன்படும் மாவு
மலைப் பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும், தானே வளரும் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் முற்றிய கிழங்குகள் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. முற்றிய கிழங்கை தோல் நீக்கிச் சுத்தம் செய்து, பின்னர் துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி காய்ந்த பின் இடித்து தூளாக்கி, வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை நீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய மாவை மீண்டும் நீரில் கரைத்து வடிகட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முறை வடிகட்டி எடுத்த மாவை வெயிலில் நன்கு உலர்த்தி அத்தூளைப் பயன்படுத்த வேண்டும்.
மேனியிடும் வாய்க்கு மிருதுவாம் ஆக்கியுண்ணத்
தானிருமல் வெப்பதிக தாகமிவை -ஏ னிருக்கும்
அம்பே ரிளங் கிழங்கி தியாவ்ர்க்கு மாமண ப்பூங்
கொம்பே கூகை கிழங்கை கூறு என்று அகத்தியர் குண பாடத்தில் கூகைக் கிழங்கு பற்றி கூறப்பட்டுள்ளது.
சிறுநீர் நோய்கள் தீரும்
சிறுநீர்க் கோளாறுகள் எதுவானாலும், இந்த மாவை கஞ்சி போல காய்ச்சிக் கொடுக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீர் தொடர்புடைய நோய்களும் தீரும்.
உடல் சூடு குணமடையும்
இது உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும். மூலச்சூடு இருந்தாலும், இதனால் சமனப்படும். இருமல், ஜுரம், நீர் வேட்கை நீங்கும், உடலுக்கு வலிமை தரும்.
வயிற்றுப் போக்கு அதிகமாக இருப்பவர்கள் இந்த மாவினை கஞ்சிபோல காய்ச்சி குடிப்பார்கள்.பேதி, சீதபேதி, ஆகும் நிலையில் இந்த மாவை கஞ்சி காய்ச்சிக் கொடுக்க நிற்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











