Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
அடிக்கடி பீர் குடிப்பவரா நீங்க? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி... ஒரு கெட்ட செய்தி...!
மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் வலி நிறைந்த ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று சிறுநீரகக் கற்கள் ஆகும். சிறுநீரக கற்கள் ஒரு பிரபலமான ஆரோக்கிய பிரச்சினையாகும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை இந்த சிக்கல் பாதிக்கிறது. சிறுநீரகக் கற்கள் கடுமையான அசௌகரியம் மற்றும் வலி ஏற்பட வழிவகுக்கும்.
இந்த சிக்கல்கள் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருப்பதாக சந்தேகிக்கும் போது உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டியது அவசியமாகும்.

சமீப காலமாக சிலர் பீர் அருந்துவது சிறுநீரகக் கற்களை குணப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், பீர் உட்கொள்வது சிறுநீரகக் கற்களைக் கடக்க உதவும் என்ற சொல்வதற்கு காரணம், அதன் டையூரிடிக் பண்புகளாகும், ஆனால் இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.
பீரின் டையூரிடிக் பண்புகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கின்றன, இது சிறிய கற்களை வெளியேற்றுவதை எளிதாக்குகிறது. பீர் உண்மையில் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கலாம் மற்றும் சிறுநீரின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறிய சிறுநீரக கற்களை (3 மி.மீ.க்கும் குறைவாக) வெளியேற்ற உதவக்கூடும், ஆனால் இது மிகவும் ஆபத்தான முறையாகும்.
கடுமையான நீரிழப்பு
- பீர் நுகர்வு கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும், குறிப்பாக வெப்பமான காலநிலையில், சிறுநீரக கல் உருவாவதற்கு இது மிகவும் முக்கியமான காரணியாக இருக்கும். எனவே கோடைகாலத்தில் உங்கள் பீர் நுகர்வை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
- நீண்ட காலத்திற்கு பீரை உட்கொள்வது ஆக்சலேட் ஏற்றத்திற்கு வழிவகுக்கும், ஏனெனில் பீரில் அதிக ஆக்சலேட் உள்ளடக்கம் உள்ளது, இது சிறுநீரக கற்கள் உருவாக்குவதற்கு முக்கியக் காரணியாகும்.
- பீரில் உள்ள கலோரி அடர்த்தியானது, இது விரைவான எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கிறது, இது சிறுநீரக கற்களுக்கான மற்றொரு ஆபத்து காரணியாகும். இது சிறுநீரகக் கற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
கல்லீரல் பாதிப்பு
பீர் ஒருவகை மதுபானமாக இருப்பதால் அதனை அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பினால் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் இதன் சிறிய நன்மையும் இல்லாமல் போய்விடும்.
இதய ஆரோக்கியம்
மிதமான மது அருந்துதல் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக கூறப்பட்டாலும், அதிகப்படியான பீர் நுகர்வு அதற்கு முற்றிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் அதிக அளவு பீர் குடிப்பது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், தினசரி பீர் குடிப்பது உட்பட அதிக மது அருந்துதல், உயர் இரத்த அழுத்தம், கார்டியோமயோபதி மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களை உருவாக்கும் என்று கண்டறிப்பட்டுள்ளது.
புற்றுநோய் அபாயம்
வழக்கமான பீர் நுகர்வு சில வகையான புற்றுநோய்களின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கூற்றுப்படி, கல்லீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு பீர் அருந்துதல் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. பீரில் உள்ள எத்தனால் அசிடால்டிஹைடாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது, இது புற்றுநோய் செல்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
மாற்றுப்பொருட்கள்
பீருடன் ஒப்பிடும்போது சிறிய சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்பான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. சிறுநீர்க்குழாயில் 3 மி.மீ.க்கும் குறைவான ஒரு சிறுநீரகக் கல் சிக்கியிருந்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது 15 நாட்களுக்குள் இயற்கையாகவே கடந்து செல்லும். இருப்பினும், அவ்வாறு வெளியேறவில்லை என்றால் மருத்துவ கவனிப்பை நாடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












