Just In
- 46 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
9 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா - மருத்துவர்கள் போராடி நீக்கினர்!
பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனாவை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீண்ட காலமாக துர்நாற்றம் வீசும் வகையிலான சளித் தொல்லையாலும், இருமல் தொல்லையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணம் என்ன என்று பரிசோதனை செய்த போது தான். அப்பெண்னின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது...
ரேணுகா!
பெங்களூரை சேர்ந்த 19 வயதே ஆன இளம் பெண் ரேணுகா, இவருக்கு அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையில் சளித்தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் உண்மை தெரியவந்தது.
ராஜீவ் காந்தி சிகிச்சை மையம்!
பெங்களூருவில் இருக்கும் ராஜீவ்காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரேணுகா. அப்போது ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள். ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனாவின் சில பாகங்கள் சிக்கியிருப்பதை அறிந்தனர்.
தொல்லை!
நுரையீரலில் சிக்கியிருந்த அந்த பேனா பாகங்களின் காரணத்தால் தான் அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையிலான சளித்தொல்லை, இருமல் போன்ற தொல்லைகளால் ரேணுகா பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
உள்ளுறுப்புகள் சேதம்!
நீண்ட காலமாக ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் தங்கியிருந்ததால் உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டு சிதைந்து போகும் நிலைக்கு ஆளாகியிருந்தன.
குறிப்பாக இதன் காரணமாக தான் சளியில் துர்நாற்றம் வீசியிருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை!
இதையடுத்து, ரேணுகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரலில் தங்கியிருந்த பேனா பாகங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.