Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
9 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா - மருத்துவர்கள் போராடி நீக்கினர்!
பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனாவை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீண்ட காலமாக துர்நாற்றம் வீசும் வகையிலான சளித் தொல்லையாலும், இருமல் தொல்லையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணம் என்ன என்று பரிசோதனை செய்த போது தான். அப்பெண்னின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது...

ரேணுகா!
பெங்களூரை சேர்ந்த 19 வயதே ஆன இளம் பெண் ரேணுகா, இவருக்கு அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையில் சளித்தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் உண்மை தெரியவந்தது.

ராஜீவ் காந்தி சிகிச்சை மையம்!
பெங்களூருவில் இருக்கும் ராஜீவ்காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரேணுகா. அப்போது ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள். ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனாவின் சில பாகங்கள் சிக்கியிருப்பதை அறிந்தனர்.

தொல்லை!
நுரையீரலில் சிக்கியிருந்த அந்த பேனா பாகங்களின் காரணத்தால் தான் அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையிலான சளித்தொல்லை, இருமல் போன்ற தொல்லைகளால் ரேணுகா பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

உள்ளுறுப்புகள் சேதம்!
நீண்ட காலமாக ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் தங்கியிருந்ததால் உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டு சிதைந்து போகும் நிலைக்கு ஆளாகியிருந்தன.
குறிப்பாக இதன் காரணமாக தான் சளியில் துர்நாற்றம் வீசியிருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை!
இதையடுத்து, ரேணுகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரலில் தங்கியிருந்த பேனா பாகங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications