Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
உங்களுக்கு அல்சைமர் வியாதி வந்துள்ளதா என எப்படி கண்டுபிடிக்கலாம் எனத் தெரியுமா?
அல்சைமர் மற்றும் டெமென்டியா ஆகியவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் வியாதி. அல்சைமர் நோயால் அடிக்கடி நினைவு பிறழும்.
ஞாபக சக்தி மிகவும் குறைந்து போய்விடும். அவர்களின் பெயர் கூட சில சமயங்களில் சொல்ல தெரியாது. இது மூளையிலுள்ள செல் சுழற்சி குறைந்து போகும்போது நிகழும்.

டெமென்டியா என்பதும் ஏறக்குறைய அல்சீமர் போலவே. முன்னுக்கு பின் முரணாக பேசுவார்கள். கோர்வையாக விஷயத்தை சொல்லாமல் ஏதோ ஒன்றை பேசுவார்கள். இது ஒருவகையான மனவியாதி.
இந்த இரண்டுமே வந்த பின் குணப்படுத்துவது கடினம். இவை நரம்பு மண்டலம் சம்பந்தபட்ட வியாதிகள். இதனை வரவிடாமல் தடுக்க ஆராச்சியாளர்கள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.
அதுதான் நுகர்தல். வயதானர்கள் மூக்கினால் நுகர்ந்து சரியாக வாசனையை கண்டுபிடிக்காவிட்டால் இது அல்சைமர் மற்றும், டெமென்டியா நோய்களில் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த சமயத்தில் தகுந்த சிகிச்சை அளித்தால், அவர்களை அந்த வியாதிகளிலிருந்து காப்பாற்றலாம். இந்த அல்சைமர் தொடர்பான ஆய்வு இரண்ட் விதமாக நியு யார்க் நகரத்தில் எடுக்கப்பட்டது.
முதல் ஆய்வை செய்த கொலம்பியா பல்க்லைக் கழகம், சுமார் 80 வயதிருக்கும் 187 வயதானர்களிடம் ஆராய்ச்சியை தொடர்ந்தது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு அவர்களில் 50 பேருக்கு அல்சைமர் மற்றும் டெமென்டியா நோயின் தாக்கம் தெரிந்தது. இதில் 20 சதவீதத்தினருக்கு ஞாபகத் திறன் குறைவாக இருந்தது.
இந்த ஆய்வில், அல்சைமர் தாக்கப்பட்டவர்களுக்கு நுகர்தல் திறன் மிகவும் குறைந்து , கடைசியில் அறியமுடியாமல் இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு பலக்லைக் கழகம் மூளையின் பாகங்கள் எவ்வாறு அல்சைமர் நோயில் செயல்புரிகின்றன என ஆராய்ந்தனர். மூளையில் சுரக்கும் அமைலாய்ட் என்ற புரதம் மிகவும் குறைந்து போயிருந்தது. நுகர்வு திறன் பாதிக்கப்பட்டதால் மூளையின் பாகங்களும் பாதிக்கப்பட்கின்றன.
இந்த ஆய்வில் தெரிய வந்தது என்ன வென்றால், அல்சீமர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வாசனை நுகர்தல் மற்றும் அமைலாய்டு சுரப்பு இரண்டுமே மிகவும் குறைந்திருக்கிறது. ஆகவே முன்கூட்டியே வாசனை நுகர்தல் குறைவாக இருக்கும்போதே இந்த நோயை குணப்படுத்துவது எளிது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



