Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
உங்களுக்கு அல்சைமர் வியாதி வந்துள்ளதா என எப்படி கண்டுபிடிக்கலாம் எனத் தெரியுமா?
அல்சைமர் மற்றும் டெமென்டியா ஆகியவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் வியாதி. அல்சைமர் நோயால் அடிக்கடி நினைவு பிறழும்.
ஞாபக சக்தி மிகவும் குறைந்து போய்விடும். அவர்களின் பெயர் கூட சில சமயங்களில் சொல்ல தெரியாது. இது மூளையிலுள்ள செல் சுழற்சி குறைந்து போகும்போது நிகழும்.

டெமென்டியா என்பதும் ஏறக்குறைய அல்சீமர் போலவே. முன்னுக்கு பின் முரணாக பேசுவார்கள். கோர்வையாக விஷயத்தை சொல்லாமல் ஏதோ ஒன்றை பேசுவார்கள். இது ஒருவகையான மனவியாதி.
இந்த இரண்டுமே வந்த பின் குணப்படுத்துவது கடினம். இவை நரம்பு மண்டலம் சம்பந்தபட்ட வியாதிகள். இதனை வரவிடாமல் தடுக்க ஆராச்சியாளர்கள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.
அதுதான் நுகர்தல். வயதானர்கள் மூக்கினால் நுகர்ந்து சரியாக வாசனையை கண்டுபிடிக்காவிட்டால் இது அல்சைமர் மற்றும், டெமென்டியா நோய்களில் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த சமயத்தில் தகுந்த சிகிச்சை அளித்தால், அவர்களை அந்த வியாதிகளிலிருந்து காப்பாற்றலாம். இந்த அல்சைமர் தொடர்பான ஆய்வு இரண்ட் விதமாக நியு யார்க் நகரத்தில் எடுக்கப்பட்டது.
முதல் ஆய்வை செய்த கொலம்பியா பல்க்லைக் கழகம், சுமார் 80 வயதிருக்கும் 187 வயதானர்களிடம் ஆராய்ச்சியை தொடர்ந்தது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு அவர்களில் 50 பேருக்கு அல்சைமர் மற்றும் டெமென்டியா நோயின் தாக்கம் தெரிந்தது. இதில் 20 சதவீதத்தினருக்கு ஞாபகத் திறன் குறைவாக இருந்தது.
இந்த ஆய்வில், அல்சைமர் தாக்கப்பட்டவர்களுக்கு நுகர்தல் திறன் மிகவும் குறைந்து , கடைசியில் அறியமுடியாமல் இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு பலக்லைக் கழகம் மூளையின் பாகங்கள் எவ்வாறு அல்சைமர் நோயில் செயல்புரிகின்றன என ஆராய்ந்தனர். மூளையில் சுரக்கும் அமைலாய்ட் என்ற புரதம் மிகவும் குறைந்து போயிருந்தது. நுகர்வு திறன் பாதிக்கப்பட்டதால் மூளையின் பாகங்களும் பாதிக்கப்பட்கின்றன.
இந்த ஆய்வில் தெரிய வந்தது என்ன வென்றால், அல்சீமர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வாசனை நுகர்தல் மற்றும் அமைலாய்டு சுரப்பு இரண்டுமே மிகவும் குறைந்திருக்கிறது. ஆகவே முன்கூட்டியே வாசனை நுகர்தல் குறைவாக இருக்கும்போதே இந்த நோயை குணப்படுத்துவது எளிது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



