Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
நறுமண உணர்வை அதிகரிக்க சில டிப்ஸ்...
மூக்கின் உதவியால் நறுமணத்தை உணர விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஏனெனில் அது நெருக்கமாக சுவை உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு காரணத்தினால், இது அவசியம். நீங்கள் உணவை சுவைக்கும் பொழுது மூக்கை கிள்ளுவது ஒரு வழி. பொதுவாக, நாம் ஒரு நுண்ணிய மெல்லிய வாசனை உள்ள மலர் அல்லது ஒருவரின் தோல் அல்லது இலையுதிர்காலத்தின் இலைகள், மண்வாசனை போன்ற சில வாசனைகளை கண்டால் மனம் அப்படியே சந்தோஷமாகவும், ஆழமான பரிமாணத்துடனும் விளங்கும். மேலும், ஒரு சராசரி மனிதனின் மூக்கால் கிட்டத்தட்ட 10,000 தனித்துவமான நறுமணங்களை கண்டறிய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

2. ஒவ்வொரு பொருளுக்கும், உணவுக்கும் ஒரு தனித்துவமான நறுமணம் உள்ளது. அதனை கண்டறிதல் ஒரு முக்கியமான ஒன்று. ஏனெனில் கண் தெரியாதவன் எப்படி எதையும் வாசனையால் ஒன்றை அறிந்து கொள்கிறான். இந்த வாசனை உணர்வானது நரம்புகளால் மூளையின் உணர்ச்சி பகுதிக்கு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
3. பாஸ்ட் பூட் உணவுகள், பிரட் அல்லது சாலையோர உணவுகளின் வாசனைகள், சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் வாசனைகள், மிளகுக்கீரை மற்றும் இலவங்கப்பட்டையின் வாசனை, நாம் மனம் ஒருமுகப்படுதலுக்கும் வயிற்றில் செரிமானத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சை மற்றும் காபியின் வாசனை தெளிவான சிந்தனையையும், ஒருமுகப்படுதலின் அளவை அதிகரிக்கவும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் துரிதமாக கண்டறிந்துள்ளன.
4. அதிக சளியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சளி பிடித்த சமயம் உணவுகளின் வாசனையை உணர இயலாது. அப்பொழுது கெட்டு போன உணவுகளை கண்டறிய முடியாது. மூக்கின் நுனிகளில் உள்ள உணரும் நரம்பு, சவ்வுகளின் நெரிசலால் வாசனை மந்தமாகி உணவின் வாசனையை அறிய முடியாமல் செய்து விடும். அந்த சமயங்களில் மந்தமாக்கும் உணவுகளான பால், சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.
இதனால் சுவையை பாதிக்கும் வகையில், உங்கள் மூக்கில் உள்ள உணர்வு செல்கள் பின் வழியே உங்கள் தொண்டைக்கு இணைக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்படும் நெரிசல் தடையால், அதனை செயலிழக்கச் செய்கிறது.
5. உங்கள் உணவில் அதிகமான துத்தநாகம் இருக்க வேண்டும். வாசனைத்தன்மை குறைவாக இருந்தால், அது உடம்பில் குறைவான கனிம துத்தநாகத்தின் குறைபாட்டை குறிப்பது. எனவே வாசனை உணர்வைப் பெருக்க, துத்தநாகம் நிறைந்த உணவுகளான கடல் சிப்பிகள், பயறு, சூரியகாந்தி விதைகள் போன்றவைகளை அதிகம் சேர்த்து கொள்ளவும். முடிந்த அளவு துத்தநாகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட முயலுங்கள்.
6. உடற்பயிற்சி செய்வதால் வாசனை உணர்வை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் ஈரப்பதம் நிறைந்த காற்றை சுவாசித்தால், வாசனை உணர்வு அதிகரிக்கப்படும். துர்நாற்றத்தில் இருந்து விலகி இருங்கள். நீண்ட நேரம் துர்நாற்றத்தை சுவாசித்தால், வாசனை உணரும் திறன், உணர்ச்சியில்லாமல் போய்விடும்.
இதனால் எது நல்ல உணவு, எது கேட்ட உணவு என்று அறியும் தன்மை அதிகரிக்கும். அதனால் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும். நன்கு சுவாசியுங்கள், உங்கள் வாசனை திறனை அதிகரித்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications