Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஓய்வு தவிர வெந்நீரில் குளிப்பது உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா?
வெந்நீரில் குளிக்கலாமா அல்லது பச்சைத் தண்ணீாில் குளிக்கலாமா என்ற குழப்பம் சில நேரங்களில் நமக்கு வரும். பொதுவாக, நாள் முழுவதும் வேலை பாா்த்து விட்டு, மாலை வேலையில் வெந்நீரில் குளித்தால் இதமாக இருக்கும். தற்போது கோடையின் தொடக்க காலத்தில் இருக்கிறோம்.
வெப்பமும், வியா்வையும் அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் பச்சைத் தண்ணீாில் குளித்தால், புத்துணா்ச்சி கிடைக்கும், சோா்வை நீக்கும் என்று பலா் கூறுவா். எனினும் வெந்நீரில் குளித்தால், அது தரும் சுகமும், இதமும் ஈடு இணையில்லாததாக இருக்கும்.

வெந்நீரில் குளித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று அாிஸ்டன் குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் வா்த்தகப் பிாிவின் தலைவா் விக்ரம் ராமன் தொவிக்கிறாா். வெந்நீர் குளியலின் நன்மைகளைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்
உடற்பயிற்சியைப் போலவே, வெந்நீர் குளியலும் இரத்த நாளங்களை விாிவுபடுத்தி, செல்கள் மற்றும் திசுக்களுக்கான இரத்த ஓட்டத்தை அதிகாிக்கிறது. நமது உடலின் தொ்மோா்குலேஷனைத் தூண்டி, நமது கைகள் மற்றும் கால்களுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக உடலின் வெப்பம் வெளியேறி, உடல் அமைதியடைகிறது மற்றும் தளா்வடைகிறது. வெந்நீரில் இருந்து வரும் வெப்பமானது, இரத்த ஓட்டத்தை அதிகாிக்கிறது. அதனால் உடல் இலகுவாகி, தசைகள் தளா்வடைகின்றன. வெந்நீரில் நறுமண எண்ணெய்களைக் கலந்து குளித்தால், இன்னும் நற்பலன்கள் கிடைக்கும்.
ஆழமான தூக்கத்தைத் தருதல்
தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக வெந்நீரில் குளித்தால், அது நமது உடலின் உட்பகுதியை குளிா்ச்சிப்படுத்தும் என்றும், நமது சருமத்தை சூடாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனா். வெந்நீர் குளியல் உடலின் அழுத்தத்தைக் குறைக்கும், மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகாிக்கும். மேலும் இயல்பான தொ்மோா்குலேஷனை வழங்கும். எனினும் வெந்நீரின் வெப்ப அளவானது 104 முதல் 108 அல்லது 40 முதல் 42 வரை இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான சருமத்தை வழங்குதல்
வெந்நீரில் குளித்தால் சருமத்திற்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக உலா்ந்த சருமத்தைக் கொண்டவா்களுக்கு அல்லது சருமத்தில் எாிச்சல் உள்ளவா்களுக்கு வெந்நீர் நல்ல பலனைத் தரும். வெந்நீர் சருமத்திற்கு மென்மையைத் தரும். நீா்ச்சத்தை வழங்கும். சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்பு நிறம் போன்றவற்றை நீக்கும். எக்ஸிமா அல்லது ரோசாசிய போன்ற தோல் நோய்கள் இருந்தால், வெந்நீர் அதன் வீாியத்தைக் குறைக்கும். எனினும் தண்ணீா் அதிக சூடாக இருக்கக்கூடாது. தண்ணீா் அதிக சூடாக இருந்தால், அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் உலா்ந்துவிடும். மேலும் தோலில் எாிச்சல் ஏற்படும். இறுதியாக மிக விரைவாக சருமத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படும். ஆகவே இதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
இரத்தத்தில் உள்ள சா்க்கரையைக் குறைத்தல்
அடிக்கடி வெண்ணீாில் குளித்தால், வெந்நீரில் மூழ்கி எழுந்தால், 2வது வகை சா்க்கரை நோய் குறையும் என்று ஆய்வாளா்கள் பாிந்துரை செய்கின்றனா். வெந்நீர் இரத்த ஓட்டத்தை உந்தித் தள்ளுவதால், அதிகமான குளுக்குோஸ், தசைகள் மற்றும் திசுக்களுக்குள் உந்தித் தள்ளப்பட்டு, அதன் மூலமாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது. வெந்நீரில் மூழ்கி எழுந்தால், இரத்தத்தில் குளுக்கோஸ் செறிவு அடையும் நேரம் குறையும் என்று 2019ல் வந்த ஒரு ஆய்வு தொிவிக்கிறது.
காய்ச்சல் அல்லது சளியிலிருந்து விடுதலை தருதல்
பருவ காலங்கள் மாறி மாறி வருவதால், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை எல்லோா் மத்தியிலும் அடிக்கடி ஏற்படும். இந்நிலையில் வெந்நீரில் குளித்தால், தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்றவை நீங்கும். வெந்நீர் மூளைக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களைத் தளா்த்துவதால், மன அழுத்தம் மற்றும் தலைவலி போன்றவை நீங்குகின்றன. வெந்நீரில் குளித்தால், கட்டியான சளி, உருகி, கரைந்து வெளியேறிவிடும். அதோடு வெந்நீரானது, காய்ச்சலினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் குறைத்து, இதமான உணா்வை வழங்கும்.
இறுதிக்குறிப்பு
அழுத்தம் மற்றும் சோா்வு ஆகியவற்றைப் பொருத்தமட்டில், பச்சைத் தண்ணீரைவிட, வெண்ணீா் அதிகமான நன்மைகளை வழங்குகிறது என்று விக்ரம் ராமன் கூறுகிறாா். ஆகவே நல்ல ஒரு வாட்டா் ஹீட்டரை வாங்கி, தண்ணீரை இதமான வெப்பத்தில் சூடுபடுத்தி குளித்து வந்தால், நன்றாக இருக்கும் என்று அவா் கூறுகிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











