Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
நோய்களை தடுக்கவும், இளமையாக இருக்கவும் தேனை எவற்றோடு சாப்பிட வேண்டும்?
தேனோடு கலந்து எடுத்துக் கொள்ளப்படும் உணவுப் பொருட்களால் எந்த மாதிரியான உடல் பாதிப்புகள் சரியாகும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேன் அற்புத பலன்களை பெற்றது. பல்வேறு மூலிகை மலர்களிடமிருந்து சேகரித்த தேன் துளிகளை சுமந்த தேனிக்களிடமிருந்து பெறப்படும் தேன் மிகவும் நல்லது. கொம்புதேன், மலைத்தேன் என இன்னும் பலவகைகளில் உள்ளது.

தேன் உறையும்தன்மை கொண்டது. கெட்டுபோகாது. குறிப்பாக மலைத்தேன் அருமையான மூலிகை குணங்களை பெற்றுள்ளது. தேன் நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டது.
தேனோடு சேர்க்கபப்டும் மற்ற பொருட்கள் இன்னும் பலம் பெற்று, நோய்களை குணமாக்கும் தன்மையாக மாறுகிறது. எந்த நோய்களுக்கு தேன் மருந்தாகிறது என பார்க்கலாம்.

கண் பார்வை அதிகரிக்க :
தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

இதய நோய்களை தடுக்க :
தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

வாதம் குணமாக :
கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட கீழ் வாதம் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க :
அரை ஸ்பூன் தேனுடன், அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு கலந்து அரை டம்ளர் நீரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

என்றும் இளமையுடன் இருக்க :
நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி அவற்றை சுத்தமான தேன் கலந்து ஊற வையுங்கள். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சுருக்கம் எட்டிப்பார்க்காது. இளமையாக இருப்பீர்கள். ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது.



Click it and Unblock the Notifications