Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
எப்படியாவது 2050 வரை உயிரோடு இருந்துட்டா அதற்கு பின் மரணம் இல்லாம வாழ்ந்துரலாமாம்...எப்படி தெரியுமா?
மருத்துவ துறை இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது, பல கொடிய நோய்களுக்கு இப்போது விரைவில் தீர்வு கண்டுபிடிக்கப்படுகிறது, கொரோனா தடுப்பூசியே அதற்கு சிறந்த உதாரணமாகும். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், ஆரோக்கியத்தையும் வெகுவாக மேம்படுத்தியுள்ளது. இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்து கிரையோஃப்ரீசிங் மூலம் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்த செயல்முறையில் இறந்த உடல் பல ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அது எப்போதாவது உயிர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன். இருப்பினும், அது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது, நிபுணர்கள் இப்போது மனிதர்கள் உண்மையில், என்றென்றும் வாழ முடியும், அல்லது நீண்ட காலம் வாழ முடியும் என்று நம்புகிறார்கள். இந்த திடீர் நம்பிக்கைக்கு காரணம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மரணமிலா வாழ்வு சாத்தியமா?
பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் கூறுகையில், இன்று நீங்கள் 40 வயதிற்குட்பட்டவராக இருந்தால், எதிர்கால மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக நீங்கள் ஒருபோதும் இயற்கையான காரணங்களால் இறக்க மாட்டீர்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடல் பாகங்களைப் புதுப்பிப்பது அல்லது மாற்றுவது.
செல்கள் வயதாவதை நிறுத்த அல்லது மாற்றியமைக்க விஞ்ஞானிகள் மரபணு பொறியியல் போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். தேய்ந்து போன பாகங்களை மாற்றி உடலை இளமையாக வைத்திருக்கக்கூடிய உடலுறுப்புகளை 3D நுட்பத்திலும் அச்சிடும் ஆய்விலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் பொருள் வயதாவது மற்றும் உடல்நிலை மோசமாவதற்கு பதிலாக, நம் உடல்கள் தொடர்ந்து சரிசெய்யப்படலாம் அல்லது புத்துயிர் பெறலாம்.
எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்த தொழில்நுட்பங்கல் மூலம் பயனடைய 2050 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில், பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சைகள் கிடைக்கக்கூடும், ஆனால் 2060 களில், அவை பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கக்கூடும் என்று நிபுணர் கூறுகிறார். எனவே, நீங்கள் இப்போது 40 வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த ஆயுளை நீட்டிக்கும் முன்னேற்றங்களைப் பயன்படுத்த போதுமான அளவு வாழ உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த சிகிச்சை முறை என்ன?
உறுப்பு மாற்று சிகிச்சைகளைத் தவிர, ஆயுளை நீட்டிக்க ஆராய்ச்சியாளர்கள் பல வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். மரபணு சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சைகள், நானோ மருத்துவம் மற்றும் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பழுதுபார்க்கும் அல்லது மறுநிரலாக்கம் செய்யும் வழிகள் போன்றவை இதில் அடங்கும். உதாரணமாக, "அழியாத ஜெல்லிமீன்" போன்ற சில விலங்குகள் வயதானதை மாற்றியமைக்க முடியும், மேலும் மனிதர்களிடம் அதை மீளுருவாக்கம் செய்யலாம் என்பதை அறிய விஞ்ஞானிகள் அவற்றைப் ஆராய்ந்து வருகின்றனர்.
என்ன பிரச்சினை ஏற்படலாம்?
மனிதர்களின் ஆயுட்காலம் குறித்த முன்னணி ஆராய்ச்சியாளரான ஆப்ரி டி கிரே, நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்ல, ஆரோக்கியமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வாழ்க்கையை வாழ்வதுமே உண்மையான குறிக்கோள் என்று வலியுறுத்துகிறார். நல்ல ஆரோக்கியம் இல்லாமல் ஆயுளை மட்டும் நீட்டிப்பது விரும்பத்தக்கது அல்ல. எனவே, விஞ்ஞானிகள் நோய்களைத் தடுத்து மக்களை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் உணர வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
எதிர்காலத்தில் என்ன இருக்கிறது?
ரே குர்ஸ்வீல் போன்ற சில விஞ்ஞானிகள், 2045 ஆம் ஆண்டளவில், மனிதர்கள் தங்கள் மனதை கணினிகளில் பதிவேற்றி, தங்கள் உயிரியல் உடல்களை விட்டுச் சென்றாலும் அழியாதவர்களாக மாறக்கூடும் என்று கணித்துள்ளனர். இந்த தொழில்நுட்பங்கள் வர இன்னும் சில தசாப்தங்களாகலாம், ஆனால் அழியா வாழ்க்கை பற்றிய மனிதர்களின் கனவு கைக்கெட்டும் தூரத்திற்கு வந்துவிட்டது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












