Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த 5 பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.. சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன், பல் துலக்கிய உடனேயே எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இதற்குப் பிறகு பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபி குடிக்கிறார்கள். ஆனால், இந்த பழக்கம் மிகவும் தவறானவை. ஏனெனில் இது வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கிறது. இது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அது கல்லீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
உண்மையில், இரவில் நிம்மதியாக தூங்கும்போது, நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்நிலையில் அமில உணவுகளை உட்கொண்டால் வயிற்றில் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கிறது. இதனால் பல வகையான உபாதைகள் உடலில் நமக்கு ஏற்படுகின்றன. அதனால்தான் வயிற்றுப் பிரச்சனைகளைத் தவிர்க்க, காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. இனிப்பு பொருட்கள்
காலை முதலில் பழச்சாறு குடிப்பவர்கள்தான் அதிகம். இது மிகவும் தவறான வழி. அதிகாலையில் பழச்சாறு அல்லது இனிப்புகள் சாப்பிடுவது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இந்த பிரச்சனையால் வயிற்று வலி மற்றும் வாயு அதிகமாக ஏற்படும். இதை திடர்ந்து செய்தால் கல்லீரல் மற்றும் கணையத்தில் சுமை அதிகரிக்கிறது. நீண்ட இரவு ஓய்வுக்குப் பிறகு, கணையம் காலையில் வேலை செய்யத் தொடங்குகிறது மற்றும் காலையில் இனிப்பு பானங்கள் குடிப்பது அதன் சுமையை அதிகரிக்கிறது. இது அதன் செயல்திறனை பாதிக்கிறது. அதனால்தான் நீங்கள் இனிப்புகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை காலை முதல் உணவாக சாப்பிடக்கூடாது. இவை அனைத்தும் கல்லீரலில் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. காலையில் அமிலத்தைக் கரைக்கும் தண்ணீரை முதலில் குடிக்கவும்.
2. டீ-காபி
பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். ஆனால் டீ, காபி போன்றவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. காபியில் நிறைய காஃபின் உள்ளது. இது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. ஏனெனில் காலையில் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாக இருக்கும். அதனால்தான் காபி குடித்த பிறகு, அதன் அளவு மேலும் அதிகரிக்கிறத. அதனால் இது வயிற்றில் தொந்தரவை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வயிறு வீங்கி இருப்பது போலவே கனமாக இருக்கும். இது அமிலத்தன்மை மற்றும் இரைப்பைக்கு அதிக வேலையை கொடுக்கும்... தேநீரில் சிறிய அளவு காஃபின் மற்றும் டானின்கள் உள்ளன. இது வயிற்றில் வாயுவை ஏற்படுத்தும்.
3. சிட்ரஸ் பழம்
சிட்ரஸ் பழத்தில் அமிலத்தன்மை கொண்ட வைட்டமின் சி உள்ளது. இதில் எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம் போன்றவை அடங்கும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் அமிலம் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் வயிறு வீங்கி வாயுத்தொல்லை ஏற்படுகிறது. காலையில் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நாள் முழுவதும் பசி எடுக்காது. மறுபுறம், வாயு மற்றும் அஜீரணம் காரணமாக, நாள் முழுவதும் மோசமாகிறது.
4. காரமான உணவு
காலையில் வெறும் வயிற்றில் காரமான உணவை சாப்பிடுவதால் வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாகி வயிற்றை பிரச்சனைக்குள்ளாக்கும்.. காரமான உணவில் உள்ள அமிலம் குடலை கீறத் தொடங்குகிறது. குடல் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளையுடன் நேரடியாக தொடர்புடையது. அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. இதனுடன் காரமான உணவுகளும் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
5. தக்காளி
தக்காளியை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. தக்காளியும் அமில தன்மை கொண்டது. தக்காளியில் காணப்படும் அனைத்து நீரும் ஆக்ஸாலிக் அமிலம். தக்காளியில் 10க்கும் மேற்பட்ட அமிலங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் அதிகம் உள்ளது. அதனால்தான் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீரை குடிக்கவும். அதன் பிறகு ஏதாவது சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











