பப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..?

உடலுக்கு எந்த வியாதி வந்தாலும் நம்மால் சிறிது பொருத்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான்...! இதை சாப்பிட கூடாது... அதை சாப்பிட கூடாது... இது சாப்பிட்டால் சர்க்கரையின்

உடலுக்கு எந்த வியாதி வந்தாலும் நம்மால் சிறிது பொருத்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான்...! இதை சாப்பிட கூடாது... அதை சாப்பிட கூடாது... இது சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகிடும்... எதார்த்தமாக எதையாவது பார்த்தால்கூட புது புது புரளிகளையெல்லாம் மக்கள் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

health

முதலில் புரளிகளை நம்பாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எது வேண்டியவை, எது வேண்டாதவை என மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செய்தாலே நன்மை கிடைக்கும். சரி... இந்த பப்பாளியை பற்றி ஏதோ சொல்ல வந்திங்களே அது என்னனு கேக்குறீங்களா..? இதோ இதை படித்து தெரிஞ்சிகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#மக்கள் பயப்பட காரணம்

#மக்கள் பயப்பட காரணம்

"சர்க்கரை" என்ற பெயரை கேட்டாலே பத்தடி தள்ளி நிற்பார்கள் சர்க்கரை நோயாளிகள். அதிலும் பழங்கள் சாப்பிட இனிப்பாக இருக்கின்றது என்ற காரணத்தாலே பலர் இதனை சாப்பிடாமலே தவிர்த்து வருகின்றனர். இது ஒரு தவறான எண்ணமே. இனிபாக இருக்கும் எல்லா பழங்களும் அதிக சர்க்கரை அளவு கொண்டதல்ல. ஆதலால், குறைந்த சர்க்கரை அளவுள்ள பழங்களை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது சிறந்தது.

# பப்பாளியின் பயன்கள்

# பப்பாளியின் பயன்கள்

பொதுவாக பப்பாளியில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளது. இது உடலின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் எ,பி,சி மற்றும் ஈ ஆகியவை உடலுக்கு அதிக வலுவை தர கூடியவை. அதிக நார்ச்சத்துக்கள் இதில் உள்ளதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலசிக்கல் போன்ற பிரச்சனைகளையும் பப்பாளி குணப்படுத்தும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ள இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் சரியான முறையில் நடைபெறும்.

#பப்பாளி சர்க்கரையின் அளவை உயர்த்தாது..!

#பப்பாளி சர்க்கரையின் அளவை உயர்த்தாது..!

பப்பாளியில் மிக குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையே தரும். சர்க்கரை நோயாளிகள் 1 கப் அளவிற்குள் பப்பாளியை சாப்பிடுவதே உகந்தது. மேலும் இது உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் துணை புரிகிறது. சிறிதளவு தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் hyperglycemia போன்ற நோய்களை குணப்படுத்தும். எனவே சிறிதளவு பப்பாளி சாப்பிடுவது உங்கள் சர்க்கரை அளவை உயர்த்தாது.

#எதிர்ப்பு சக்தி

#எதிர்ப்பு சக்தி

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, ஒரு மிக சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகம் பயன்படுகிறது. உடல் தசைகள் வலு பெறவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பப்பாளி உதவுகிறது. மேலும் இளமையிலே வயதாவதை தடுக்க, பார்வை சார்ந்த நோய்களை சரி செய்ய ஆற்றல் புரிகிறது..

#பசியை போக்கும்

#பசியை போக்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு இயல்பாகவே அதிக பசி எடுக்கும். அந்த நேரத்தில் தேவையற்ற கொழுப்புகள் நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டால் அது நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அந்த சமயங்களில் பப்பாளியை நொறுக்குத்தீனி போல சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் கெடாமல் சர்க்கரையின் அளவும் உயராமல் இருக்கும். உங்களுக்கு வெறும் பப்பாளியை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு சாப்பிட்டால் மேலும் சுவையை தரும்.

#உடல் எடை

#உடல் எடை

உடல் சார்ந்த பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்று உடல் எடை கூடுதல். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது கடினமான விஷியமாகவே இருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள மிக குறைந்த கலோரிகள் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். மேலும் வயிற்று பகுதியில் ஏதேனும் வீக்கம் இருந்தால் அதனையும் எளிமையாக சரி செய்துவிடும்.

#இதயத்திற்கு நல்லது

#இதயத்திற்கு நல்லது

நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் உங்களுக்கு கூடுதல் பரிசாக இதய நோயும் வருவது இயல்பே. இருப்பினும் இதை சரி செய்ய பலவித மருந்துகளையும் நாம் உபயோகித்து இருப்போம். இதில் பலன் கிடைக்காமலேயே இருக்க கூடும். இவர்களுக்கென்றே இருக்கிறது நம்ம பப்பாளி. flavonoids, வைட்டமின் சி போன்றவை அதிகம் இவற்றில் இருப்பதால் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். மேலும், triglycerides-சை குறைத்து இதய நோய்கள் வராமல் காக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, July 21, 2018, 15:44 [IST]
Desktop Bottom Promotion